states

தில்லியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்புக்கு பாஜக சதியே காரணம்!

புதுதில்லி, ஜூலை 15 - தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்தி ற்கு பாஜக தீட்டிய சதியே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பி னருமான சஞ்சய் சிங் குற்றம் சாட்டி யுள்ளாா். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: தில்லியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்யவில்லை. பிறகு வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?. பாஜக தீட்டிய ஆழமான சதியால் தான் நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள் ளது. பிரதமா் நரேந்திர மோடியின் மனதில் மறைந்திருக்கும் வெறுப்பு, இப்படிப்பட்ட சம்பவங்களில் வெளி வருகிறது.  ஹரியானா மாநிலம் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஹரியானா, உத்தரப் பிரதேசம், தில்லி ஆகிய மூன்று வழிகளில் தண்ணீா் செல்கி றது. ஆனால், ஹத்னிகுண்ட் தடுப்ப ணையிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து தண்ணீரும் கடந்த ஜூலை 9 முதல் 13 வரை தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீா் ஒருவேளை சீராக திறந்து விடப்பட்டிருந்தால், தற்போது தில்லி யில் வெள்ளம் ஏற்பட்டிருக்காது.

 ஹத்னிகுண்டின் மேற்கு - கிழக்கு கால்வாயில் கடந்த 9-ஆம் தேதி எவ்வளவு தண்ணீா் திறக்கப்பட்டது என்று ஹரியானா மாநில முதல்வ ரிடம் கேட்டாலே அனைத்தும் வெளிச் சத்திற்கு வந்துவிடும். பாஜக ஏன் இப்படி செய்கிறது?. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகு திகளிலும் பாஜக எம்.பி.க்களே உள்ள னர். இந்நிலையில், தில்லியின் வழியே தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று  அந்த 7 மக்களவைத் தொகுதி உறுப்பி னர்களும் பிரதமா் மோடியிடம் முறை யிட்டிருந்தால் நன்றாக இருந்தி ருக்கும். 5 மாநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டு பிரதமா் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், பாஜகவினர் மக்களின் உணா்வில் அரசியல் செய்து வருகின்றனா். தில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வா் அரவிந்த் கெஜ்ரி வால் தனது அமைச்சா்களுடன் களத்தில் இருக்கிறார். ஆனால், உத்த ரப் பிரதேசம், ஹரியானா மாநிலங்க ளின் முதல்வா்கள், மக்களுடன் இருக்கும் படத்தை பாா்க்க முடிய வில்லை. இவ்வாறு சஞ்சய் சிங் கூறி யுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஹரி யானா முதல்வரின் நீர்ப்பாச னத்திற்கான ஆலோசகர் தேவேந்திர சிங், “ஹத்னிகுண்ட் தடுப்பணையில் ஒரு லட்சத்திற்கும் அதிக கனஅடி தண்ணீர் வரும்போது, பெரிய பாறை கள் காரணமாக மேற்கு யமுனை மற்றும் கிழக்கு யமுனை கால்வாயில் தண்ணீரை வெளியேற்ற முடியாது” என தெரிவித்துள்ளார்.