உலகிலேயே அரசு திரட்டிய ஒரு நிதி தனி யாருக்குச் சொந்தமானது என்று பதில் அளித்த அரசு, மோடி அரசுதான்! அப்படித் திரட்டப்பட்ட நிதி எத்தனை ஆயிரம் கோடிகள் என்று தெரியாது. எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்று தெரியாது. யாருக்குச் செலவு செய்யப்பட்டது என்று தெரியாது. எவ்வளவு மீதி இருக்கிறது என்று தெரி யாது. அரசு ஊழியர்கள், மக்கள், நிறுவனங்கள் என்று அனைவரையும் பிரதமர் கேட்கிறார் என்று வசூலித்துவிட்டு, கணக்கு சொல்ல மறுத்ததைவிடப் பெரிய ஊழல் இருக்க முடியுமா? இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகிய நால்வரும் பதவி யின் அடிப்படையில்(எக்ஸ் அஃபீஷியோ) அறங் காவலர்களாக இருப்பதாகத்தான் பிஎம் கேர்ஸ் என்ற அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், ஆட்சி மாறி வேறு பிரதமர் வரும்போது இருப்பு என்ன என்று தெரிந்துவிட்டுப் போகிறது என்று தோன்றலாம். ஆனால், அந்த அறக்கட்டளையைக் கலைக்க லாம், கலைக்கும்போது அந்த நிதியை வேறு அறக் கட்டளைகளுக்குக் கொடுத்துவிடலாம் என்று அதன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி யான வேறு அறக்கட்டளைகள் என்ற வழியில் இருக்கிற நிதி அனைத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளலாம். அதனால்தான் இன்றுவரை பிஎம் கேர்ஸ் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது, இதுவரை தேர்தல் பத்திரங்கள் இருந்ததைப்போல! பெரிய கோட்டை அழிக்காமல் சிறியதாக்கிய அதைவிடப் பெரிய கோடு மாதிரி, பிஎம் கேர்ஸ் தரவு கள் வெளிவரும்போது, தேர்தல் பத்திரங்கள் சிறிய ஊழலாக ஆகிவிடுகிற வாய்ப்பு இருக்கிறது!