கேரள இடதுசாரி அரசு விழிஞ் ஞத்தில் ரூ.7,700 கோடி செல வில் பிரம்மாண்டமான ஆழ் கடல் சர்வதேச துறைமுகம் கட்டி அமைத் துள்ளது. கடந்த அக்.12 அன்று இந்த துறைமுகத் திற்கு சீனாவின் ஷாங்காயிலிருந்து வந்த ஷென்ஹுவா-15 என்ற முதல் கப்பல் மூன்று கிரேன்களை இறக்கிவிட்டு புதனன்று சீனா திரும்பியது. இந்நிலையில், சீனாவில் இருந்து இரண்டாவது கப்பலான ஷென்ஹுவா-29 திங்களன்று (அக்.23) ஷாங்காயில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி யது. ஆறு கிரேன்களுடன் இந்தக் கப் பல் விழிஞ்ஞம் துறைமுகத்தை நவம்பர் 9 ஆம் தேதி வந்தடையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நவம் பர் இறுதி மற்றும் டிசம்பர் முதல் வாரத் தில் மேலும் 2 கப்பல்கள் கிரேன்களுடன் வரவுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.