states

‘இந்தியா’ ஒருங்கிணைப்புக் குழு இன்று கூடுகிறது

புதுதில்லி, செப். 12- “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் தில்லியில் புதனன்று நடைபெறுகிறது. கே.சி. வேணுகோபால் (காங்கிரஸ்), டி.ஆர். பாலு (திமுக), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), சஞ்சய் ராவத் (சிவசேனா), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), ராகவ் சதா (ஆம் ஆத்மி), ஜாவெத் அலி கான்  (சமாஜ்வாதி கட்சி), லாலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்), டி.ராஜா (சிபிஐ), உமர்  அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி) மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிப் பிரதிநிதி அடங்கிய  ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில் புதனன்று நடைபெறுகிறது.இக்கூட்டத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான தேர்தல் வியூகம், பிரச்சார வியூகம், பொதுக் கூட்டங் கள் நடைபெற உள்ள இடங்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு களை எடுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும், சமூக ஊடகக் குழு, பிரச்சா ரக் குழு, ஆராய்ச்சிக் குழு போன்ற பல்வேறு துணைக் குழுக்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டு அவற்றின் செயல்பாடு களுக்கு ஒப்புதல் வழங்கப் படும் எனத் தெரிகிறது.