states

img

உ.பி.யில் பாஜகவுக்கு ஓட்டுபோடாத இந்துக்களின் வீடுகளை இடிப்போம்!

லக்னோ, பிப்.16- “உ.பி.யில் பாஜகவுக்கு வாக்களிக் காத இந்துக்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளுவோம்” என்று தெலுங்கானா-வைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். 403 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை இரண்டுகட்ட வாக்குப்பதிவு முடிந்து விட்டது. இந்த 2 கட்டத் தேர்தல் நில வரங்கள், தங்களுக்கு சாதகமாக இல்லை; சமாஜ்வாதி கூட்டணிக்கே அதிக வாக்குகள் சென்றுள்ளன என்று பாஜக தலைவர்கள் கருதுகின்றனர். எனவே, எஞ்சியுள்ள 5 கட்டத் தேர்தல் களில் எப்படியாவது மக்களைத் தங்க ளுக்கு வாக்களிக்க வைத்துவிட வேண் டும் என்று அவர்கள் பல்வேறு திட்டங்க ளைத் தீட்டி வருகின்றனர். இந்நிலையில்தான், “இந்துக்கள் திர ளாக வந்து யோகி ஆதித்யநாத்திற்கு வாக்களிக்க வேண்டும், பாஜக-வுக்கு வாக்களிக்காதவர்களுக்காக, யோகி ஆதித்யநாத் ஆயிரக்கணக்கான ஜேசிபி மற்றும் புல்டோசர்களைப் பெற்றுள்ளார் என்பதை நான் அவர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். தேர்தல் முடிந்த தும், யோகிஜியை ஆதரிக்காத மக்களுக் கான பகுதிகள் கண்டறியப்படும். எனவே,  பாஜகவுக்கா, புல்டோசருக்கா... யாருக்கு வாக்களிப்பது? என்பதை மக்க ளாகிய நீங்களே முடிவு செய்து கொள் ளுங்கள்” என்று தெலுங்கானா எம்எல்ஏ ராஜா சிங் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.  இந்த வீடியோ சமூகவலைதளங்க ளில் பரவிய நிலையில், பலரும் ராஜா சிங்கிற்கு தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.