இந்தியாவை தலைமை யிடமாக கொண்டு செயல் படும் டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், உள்நாடு மட்டுமின்றி சர்வ தேச அளவிலும் முன்னணி நிறு வனமாக விளங்கி வருகிறது.
இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக அமெ ரிக்காவை சேர்ந்த “எபிக் சிஸ்டம்ஸ் கார்ப்பரேஷன்” என்ற பிரபல மென்பொருள் நிறுவனம்,”எங்கள் நிறுவ னத்தின் ஆவணங்களை அதன் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து “மெட் மந்த்ரா” என்ற பெயரிலான மென்பொருளை டிசிஎஸ் தயா ரித்துள்ளது. இது அறிவுசார் சொத்துரிமை விதிமீறல் என்ற வகையில் சட்டத்துக்கு புறம் பானது” என குற்றம்சாட்டி அமெரிக்காவின் விஸ்கான் சின் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தி ருந்தது.
இந்த வழக்கை விசாரித்த விஸ்கான்சின் நீதிமன்றம் டிசிஎஸ் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, எபிக் சிஸ்டம்ஸ் நிறுவனம் கோரிய 140 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1,166 கோடி) தொகையை நஷ்ட ஈடாக வழங்குமாறும் டிசிஎஸ் நிறு வனத்துக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அமெ ரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிசிஎஸ் சார்பில் மேல்முறை யீடு செய்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.