புதுதில்லி,பிப்.3- தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் சிபிஐ விசார ணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது17) தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி யில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி யில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த மாதம் லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் குறை வான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்த தாகவும் மாணவி லாவண்யா கூறும் வீடியோ வெளியானது.
இதனைத்தொடர்ந்து விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டார். மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவியின் தற்கொலையை வைத்து பாஜக தமிழகத்தில் மதமோதலை உருவாக்க முயற்சிப்பதாக தமிழக கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள்,மாணவர்கள் கண்ட னம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. நீதிபதியின் இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிபிஐ விசாரணையை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் பிப்ரவரி 3 வியாழனன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை மனு தாக்கல் மாணவி லாவண்யாவின் தந்தை முரு கானந்தம் பிப்ரவரி 3 வியாழனன்று உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ,தனது மகள் லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.