states

நில அளவைத் துறையில் அரசாணை எண்.297ஐ ரத்து செய்திடுக!

தமிழ்நாடு அரசின் நில அளவை பதிவேடு கள் துறையில் அடிப்படை ஆதாரப் பணியாளர்களாக விளங்கும் புல உதவி யாளர்கள் இனத்தில் 707 பணியிடங்களை வெளி முகமை மூலம் நிரப்பிட வேண்டும் என்றும், அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்தும் அரசாணை (டி-2) எண்.297ஐ 7.9.2023 அன்று தமிழக அரசு வெளி யிட்டுள்ளது.  அரசாங்க வேலைக்கு ஆள் எடுக்காமல் விடுதல், காலிப் பணியிடங்களை நிரப் பாமை, புதிய பணியிடங்கள் தோற்று விக்கப்படாதது, தேவைப்படும் இடங்களில் தற்காலிகப் பணியாளர்களை நியமித்துக்  கொள்ளுதல், வேலை முடிந்ததும் அவர்க ளை விரட்டிவிடுதல், ஒப்பந்த முறையில் பணியாளர்களை அமர்த்துதல், அவுட்சோர்சிங் முறையில் ஊழியர்களை நியமித்தல் போன்ற பலகட்ட வடிக்கட்டலுக்குப் பின்னர் தமிழக அரசு பெரும்பான்மையான துறைகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு வந்துள்ள தையே இந்த அரசாணை உணர்த்துகிறது. அரசாணை எண்.297 நில அளவைத் துறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட சாணை தீட்டப்படும் கத்தி போன்றது.  

ஏற்கனவே அரசுத்துறையில் காலியாக உள்ள 50 சதவீதத்திற்கும் மேலான ‘டி’ பிரிவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் கைவி டப்பட்டுள்ள நிலையில், காலியாக விடப் பட்டுள்ள பணியிடங்கள் 50 சதவீதத்தை  நெருங்கியுள்ள நிலையில் தற்போது நில அளவைத் துறையில்  வெளியிடப்பட்டி ருக்கும் அரசாணை  297ன் மூலம் முக்கியத் துறையாக விளங்கும் நில அளவைத்துறை யின் கட்டமைப்பை தனியார் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் நடவ டிக்கையை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. இந்த அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலு வலர்கள் ஒன்றிப்பு  14.9.2023 அன்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. இளைஞர்களின் அரசுப் பணி எனும் எதிர்கால கனவினை கேள்விக் குறி யாக்கும் அரசாணை 297ஐ ரத்து செய்ய வேண்டும்.அரசாணை எண்.297 மூலம் நில அளவைத்துறையில் தனியார் ஏஜென்சி யை கொண்டு புல உதவியாளர் நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டு  இருக்கும் அரசா ணையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாநிலத்  தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து...