எப்போதும் தமிழ்நாடு அல்லது கேரளாவில்தான் ஏதாவது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும்னு நாம எல்லாருக்கும் தெரியும். அதுவும் மோடிஜி அரசுக்கெதி ராக என்றால் அந்த இரு மாநிலங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வடமாநி லங்கள்ல தனியா மாட்டிக்கிட்ட முஸ் லிமை நாங்க அடிச்சுத் துவைக்கற மாதிரி காட்சிகள் இருக்குமே தவிர, மோடிஜி அர சுக்கெதிராக அங்கே மக்கள் திரண்டு போராட்டம் நடத்தறது அநேகமா இருக் காது. வட மாநில விவசாயிகள்தானே அதி கமாப் போராடினாங்கன்னு கேக்கறீங் களா.. அது ஒரு விதிவிலக்குன்னு வச்சுக் குங்களேன்… இப்ப சில நாட்கள் முன்னாலே ராணு வத்திற்கு 17.5 வயசிலேருந்து 21 வயது வரை உள்ள இளைஞர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க “அக்னி பாத்”-னு ஒரு திட்டத்தை மோடிஜி அறி விச்சாரு.. நாடெங்கிலும் எதிர்ப்பு எழுந்தா லும், நாங்க எதிர்பார்க்காத வட மாநிலங் கள் தீப்புடிச்சு எரியறது எங்களுக்கு ஆச்ச ரியமாத்தான் இருக்கு.. ராணுவத்தில இளைஞர்களைச் சேர்த்து புது ரத்தம் பாய்ச்சத்தான் இந்தத் திட்டம்னு மோடிஜி சொன்னதை அவங்க நம்பத் தயாரா இல்லை.
அதானி, அம்பானி மாதிரி அவருக்கு நெருக்கமான கூட்டாளிகளோட ஒப்பந்தம் போடறது மாதிரி ராணுவத்தையும் நெனச் சுட்டாரேன்னு நெனச்சு அவங்களுக்கு பத்திக்கிட்டு வருதாம்.. அதான் ரயில், பஸ்னு எல்லாத்தையும் நாங்க பத்த வைக்கறோம்கறாங்க. நாலு வருஷம் கழிச்சு 25 சதவீதம் பேரை ராணுவத்தில வச்சுக்கிட்டு, மீதி 75 சத ஆட்களை கை யிலே கொஞ்சம் ரூபாயைக் குடுத்து வீட்டுக்கு அனுப்பிடப் போறாங்க. அவங்களுக்கு பென்ஷன், பிஃஎப் எதுவும் கிடையாதுன்னு தெரிஞ்சதும் முழிச்சிக்கிட்டாங்க.. ஆகா, நம்மளை வச்சு செய்யறாங்கன்னு புரிஞ்சுக்கிட் டாங்க.. இந்தப் போராட்டத்திலே அனைத்து ஜாதி, மத மக்களும் இணைஞ்சு போராடறாங்க.. இது நமக்கு ஆபத் தாச்சே.. நாங்க நினைக்கறதுக்கு நேர் மாறா நாடு போய்க்கிட்டு இருக்கு. இதை அப்படியே விட்டுற முடியாதே... ராம பிரான், அனுமான், கிருஷ்ண பகவான், காசி விசுவநாதர் எல்லாருமே எங்களைக் கைவிட்டுட்டாங்க.. இப்ப என்ன செய்ய றதுன்னு தலையில கைவச்சிக்கிட்டு உக்காந்திருக்கோம்.. இதிலேருந்து தப்பிக்க மோடிஜி-அமித் ஷா கிட்ட யோசனை இல்லாமயா இருக்கும்? ஏதாவது செய்வாங்க.. கொஞ் சம் வெயிட் பண்ணிப் பார்ப்போம்..
சமீபத்தில இன்னொரு விஷ யத்தைத் தெரிஞ்சுக்கிட்டோம். கடந்த 8 வருசமா நாங்க முஸ் லிம்களுக்குப் பண்ணாத கொடுமையா? மாட்டிறைச்சி வச்சிருந்தாங்கன்னு சொல்லி அவங்களை அடிச்சே கொல் றது.. கலவரத்தை நாங்க தூண்டி விட்டுட்டு பழியை அவங்க மேலே போட்டு உள்ளே தள்றது.. குடியுரிமைச் சட்டம்னு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அவங்களை நாடற்ற அனாதைகளா ஆக்கறது.. புல் டோசரை வச்சு முஸ்லிம்களோட வீடு, கடைகளை இடிச்சுத் தள்றதுன்னு எல் லாம் பண்ணிக்கிட்டுத்தான் இருந்தோம். அப்பல்லாம் இந்த அரபு நாடுகள் எங்களை ஒண்ணுமே சொன்னது இல்லை. இப்ப நபிகள் நாயகம் பத்தி நூபுர் சர்மா மோசமாப் பேசிட்டார்னதும் நம்ம நாட்டைக் கண்டிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரமிச்சுட்டாங்க.. இந்தியா விலேருந்து அங்கே போய் வேலை பார்த்திட்டிருக்கறவங்களை வெளியே போன்னு வெரட்டி விட்டுட்டாங்கன்னா..? இதிலேருந்து ஒண்ணு தெரிஞ்சுக்கிட் டோம். இங்கே இருக்கற முஸ்லிம்களை நாம என்ன பண்ணாலும் அவங்களுக்குக் கோபம் வராது போல.. நபிகளைப் பத்தி நாம எதுவும் தவறாப் பேசிடக் கூடாது... இனிமே கவனமா இருந்துக்க வேண்டியது தான்.
ராஜகுரு