அஃப்ரின், பிப். 7 - நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட பகுதியான சிரியாவின் அஃப்ரின் பகுதியில் இடிபாடு களுக்குள் கர்ப்பிணி பெண் ஒருவர் சிக்கி னார். இடிபாடுகளுக்குள்ளேயே பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மீட்க பொதுமக்கள், பத்திரிகையாளர் என பலரும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இடிபாடுகளுக்குள் மூச்சு விட முடியாத இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளராத அப்பெண், அழகிய பெண் குழந்தையை பெற்றடுத்தார். இதனை துரித மாக கண்ட உடனே சிரிய பத்திரிகையாளர் ஒருவர் உயிரை பணயம் வைத்து உள்ளே இறங்கி குழந்தையை தூக்கி உயிரோடு மீட்டார். ஆனால் குழந்தையின் தாயாரை உயிருடன் மீட்க முடியவில்லை. அதிக ரத்தப்போக்கு, வலி, போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் அவரை சடலமாக மீட்கப்பட்டதாக சிரிய பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.