மங்களூர், பிப்.20- ஹிஜாப் அணிய கல்விநிலையங் களும் காவல்துறையும் தடைவிதித் தும், கடும் அடக்குமுறைகளை கட்ட விழ்த்தும் விட்டுள்ள நிலையில் கர்நாட காவில் அதற்கு எதிரான போராட்டங் கள் தொடர்கின்றன. தட்சிண கன்னடா வில் பள்ளி, கல்லூரி வளாகத்தில் தடை உத்தரவு வரும் 26ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்லூரி யில் ஹிஜாப் அணிந்த 58 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். யெதகீர், பெல்லாரி, பெலகாவி, சித்ரதுர்கா ஆகிய இடங்களிலும் மாண விகளை சனிக்கிழமையும் வெளியில் நிறுத்திய சம்பவங்கள், மோதல் சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்த போராட்டங்களால் பெலகாவி விஜ்பாரா மருத்துவக் கல்லூரி கால வரையின்றி மூடப்பட்டுள்ளது. தவாண்கரே ஹரிஹர எஸ்ஜேவிபி கல் லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். குடகிலும் மாண வர்கள் போராட்டம் வலுவாக உள்ளது. தும்கூரு எம்பிரஸ் கல்லூரியின் 15 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஹிஜாப் அணிவதற்கு உயர்நீதி மன்றம் விதித்த தடை நீடிப்பதால் மாநி லத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து செல்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா மிரட்டல் விடுத்துள்ளார்.