states

img

பலாத்கார கொலையாளி மரண தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்

கடந்த 2015இல் பீகார் மாநிலத்தின் பாட்னா அருகே தனது வீட்டில் தொலைக்காட்சி பார்க்க வந்த  11 வயது சிறுமியை  பாலியல் பலாத்காரம்  செய்து கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு  பாட்னா உயர்நீதி மன்றம் மரண தண் டனை விதித்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை திங்களன்று விசாரித்த உச்சநீதிமன்றம் பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து  செய்வதாக அறிவித்துள்ளது. குற்றவாளி யின் மேல்முறையீடு மற்றும் மரண தண்ட னையை உறுதிப்படுத்தக் கோரிய பீகார்  அரசின் மனுவை பாட்னா உயர்நீதி மன்றம் மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 8 வருட விசாரணைக்கு பிறகு பலாத்கார கொலையாளியின் மரண  தண்டனையை பாட்னா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில், உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்த விவகாரம் கடும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.