states

img

முத்தலாக் விவகாரத்தில் எத்தனை வழக்குகள் பதிவு? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

முஸ்லிம் சமூகத்தில் மனைவிக்கு மூன்று முறை “தலாக் (விவா கரத்து)” என்று கூறி கணவர்கள் நேரடியாக  விவாக ரத்து செய்யும் வழக் கம் இருந்தது. கடந்த 2019இல் ஒன்றிய அரசு முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததைய டுத்து, மூன்று முறை  தலாக் கூறி விவாக ரத்து செய்யும் முஸ்லிம் ஆண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், முத்தலாக் தடைச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்பு கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங் கிய அமர்வு இருதரப்பு வாதத்திற்குப் பின்,”முத்தலாக் விவகாரத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. முஸ்லிம் பெண்கள் (திரு மண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019இன் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்த தரவுகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்தால் அது செல்லுபடியாகாது ; கணவன்-மனைவி இடையே உறவு தொடர்கிறது ; முத்தலாக் கூறி கணவன் மீது வழக்கு தொடரப் பட்டாலும் அவர்களின் உறவு தொடர்வ தாகவே அர்த்தம்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர்.