states

செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க ஜூலை 26 வரை உச்சநீதிமன்றம் தடை!

புதுதில்லி, ஜூலை 21 - அமைச்சர் செந்தில் பாலாஜி யை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு ஜூலை 26 வரை  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, இறுதிமுடிவை எட்டுவதற்காக, மூன்றாவது நீதிபதி யாக சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப் பட்டார். இதில், “செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம் அல்ல” என்ற நீதி பதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதிப்படுத்தி ஜூலை 14 அன்று தீர்ப்பு வழங்கினார்.  செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தனது ஆட்கொணர்வு மனு  மீதான சென்னை உயர் நீதிமன்றத் தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந் தார். தனது கைது நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜியும் ஏற்கென வே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்திருந்த நிலையில், இந்த மனுக்கள், நீதிபதிகள் போபண்ணா,  எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமையன்று விசார ணைக்கு வந்தன.

செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தரப்பில் மூத்த வழக்கறி ஞர் கபில் சிபல் ஆஜரானார். அமலாக் கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா ஆஜரானார். சென்னை உயர் நீதிமன்றத்தில் போலவே, உச்சநீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின்படி, அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் கிடையாது என வாதிட்டார். அதேபோல், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிப்பது தங்களுக்குள்ள சட்ட உரிமை என  அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை வைத்தார். கபில் சிபல் விசாரணையை வேறு தேதிக்கு தள்ளி வைக்கக் கோரிய  போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார்  மேத்தா, ‘குற்றம் சாட்டப்பட்டவருக்கு போதுமான வசதிகள் சலுகைகள் கிடைத்துவிட்டன’ என்று கிண்டலாக கூறினார். அதற்கு கபில் சிபல், ‘அமலாக்கத்துறையும் அவரைப் போதுமான அளவுக்கு அவமதித்து விட்டது’ என பதிலடி கொடுத்தார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட  உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த  வழக்கில் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை  26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அப்போது வாதங்களை சுருக்க மாக முடிக்குமாறும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “செந்தில்  பாலாஜி வழக்கில் ஜூலை 26 வரை,  நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது” என்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர். அமலாக்கத்துறையும் அதனை ஏற்று, “செந்தில் பாலாஜியை தற்போ தைக்கு காவலில் எடுத்து விசாரிக்க மாட்டோம், அவர் மீதான 15 நாள் நீதி மன்றக் காவல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை விசாரணை நடக்காது” என உறுதியளித்துள்ளது.