states

நேரில் ஆஜராக கடைசி வாய்ப்பு: விஜய் மல்லையாவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுதில்லி,பிப்.13- இந்திய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் வாங்கி திருப்பித் தராமல் லண்டனுக்கு தப்பி ஓடியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது வாரிசுகளின் பெயருக்கு மாற்றி னார். நீதிமன்ற உத்தரவை மீறிய தால் அவர் மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  பல முறை நேரில் ஆஜராக உத்தரவிட்டும், வரவில்லை. இதனைத்தொடர்ந்து நேரில் ஆஜராவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதாகவும் அதுவே கடைசி வாய்ப்பு என்றும் உச்சநீதிமன்றம் விஜய் மல்லை யாவை எச்சரித்துள்ளது. நீதிபதி யு.யு.லலித் தலைமை யிலான அமர்வில், தனிப்பட்ட  முறையிலோ அல்லது வழக்கறி ஞர் மூலமாகவோ தனது நிலைப் பாட்டை முன்வைக்க மல்லையா வுக்கு இரண்டு வாரகால அவ காசம் கொடுக்கப்படுவதாகவும், அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.