states

தென்பெண்ணை ஆறு தீர்ப்பாய வழக்கு : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுதில்லி, அக். 3 - காவிரியை தொடர்ந்து தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே யார்கோல் என்ற இடத்தில் அணை கட்டும் நடவடிக்கையை கர்நாடக அரசு மேற்கொண்டது. இந்த தன்னிச்சையான நடவடிக்கையை தடுக்க 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் தீர்ப்பாயம் அமைக்க ஒரு  மாத காலம் அவகாசம் கேட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப் பட்டது. கர்நாடக மாநில சட்டப்பேர வை தேர்தல் நடைபெறுவதால், கால அவகாசம் கோரப்பட்டது.  இந்நிலையில் செவ்வாயன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு ஆஜரான ஒன்றிய அரசு வழக்கறிஞர், தீர்ப்பாயம் அமை க்கப்படவில்லை என கூறினார். இத னால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் காரணத்தை விளக்குமாறு கூறினர். அப்போது, கர்நாடகாவில் புதிதாக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தற்போதைய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விளக்கம் பெற வேண்டி இருப்பதாக ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப் பட்டது.  இதற்கு கடும் அதிருப்தி தெரி வித்த நீதிபதிகள், பழைய அரசு புதிய அரசு என்ற தகவல்கள் தேவை யில்லை எனவும், தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்துத் தான் தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வும் கூறினர்.  இதையடுத்து இறுதி யாக ஒரு வார காலஅவகாசம் அளிக்குமாறு ஒன்றிய அரசு தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்றுக்  கொண்ட நீதிபதிகள் ஒரு வார கால த்திற்குள் தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.