states

ஜூலை 26 வரை உச்சநீதிமன்றம் தடை!

புதுதில்லி, ஜூலை 24- கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்லியல்துறை ஆய்வு நடத்துவ தற்கு ஜூலை 26 வரை உச்ச நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது.  வாரணாசி நீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், கியான் வாபி மசூதியில் திங்களன்று காலை ஆய்வுகள் துவங்கிய நிலையில், இதற்கு எதிராக மசூதி நிர்வாகம் தொடுத்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி யில் காசி விஸ்வநாதர் கோயிலை யொட்டி, கியான்வாபி மசூதி உள்ளது.  இந்த மசூதியின் சுவரில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபடுவ தற்கு அனுமதி கோரி, கடந்த 2021- இல் 5 இந்துப் பெண்கள் வாரணாசி  மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தனர். இதனை விசாரித்த நீதி மன்றம், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டு நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்  பட்டது. அதில் மசூதியின் ஒசுகானாவின்  நடுவே இருக்கும் நீரூற்று போன்ற அமைப்பை சிவலிங்கம் என்று கூறியது  சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படை யில், கியான்வாபி மசூதியில் இந்திய  தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று 4 இந்துப் பெண்களும் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்த னர். “ஆதி விஸ்வேஸ்வரரின் கோயில்  மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டு உள்ளது. இதை உறுதி செய்ய கியான் வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்” என்று அவர்கள் கூறினர். மசூதி நிர்வாகமோ, “எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின்  மீதும் மசூதி கட்டப்படவில்லை” என்று  தெரிவித்தது.  ஆனால், இருதரப்பு வாதங்களை யும் கேட்ட வாரணாசி மாவட்ட நீதிமன்ற  நீதிபதி ஏ.கே. விஸ்வேஷா, “வாரணாசி யின் கியான்வாபி மசூதியில் இந்திய  தொல்லியல் துறை அறிவியல்பூர்வ மான கள ஆய்வை நடத்தி ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஜூலை 21  அன்று உத்தரவிட்டார். மேலும், “ஒசு கானா பகுதியில் மட்டும் ஆய்வு நடத்  தக்கூடாது. ஆய்வின்போது மசூதிக்கு  எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது. ஆய்  வின்போது தொழுகை நடத்தலாம்” என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இந்த தீர்ப்பின்படி, தொல்லியல் துறை அதிகாரிகள், திங்கட்கிழமை காலை கியான்வாபி மசூதியில் ஆய்வி னைத் தொடங்கினர். தொல்லியல் துறை அதிகாரிகள், வழக்கைத் தொடர்ந்த 4 இந்துப் பெண்கள், அவர்  களின் வழக்கறிஞர்கள், கியான்வாபி மசூதி நிர்வாகக் குழுவினர் உள்பட 40  பேர் மசூதிக்குள் சென்றிருந்தனர். போலீசாரும் அங்கே குவிக்கப்பட்டி ருந்தனர்.  இதனிடையே, வாரணாசி மாவட்ட  நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு,  மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன் றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர் ஹுஷிபா அக்மதி, இந்த  வழக்கை அவசர வழக்காக விசாரிக்க  வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனைக் கவனத்தில் எடுத்துக்  கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, புதன்கிழமை வரை ஆய்வு நடத்துவதற்கு தடை விதித்தது. மேலும், தடை உத்தரவு முடிவதற்குள், தொல்லி யல் துறையின் ஆய்வினை எதிர்த்து, மசூதி நிர்வாகம் தாக்கல் செய்யும் வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளு மாறும் அறிவுறுத்திய நீதிபதிகள், உத்த ரப்பிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்  தில் ஆஜராகியிருந்த நிலையில், மசூதி  வளாகத்தில் எந்தவித ஆக்கிரமிப்பு வேலையும், ஆய்வும் செய்ய வேண் டாம் என்று தொல்லியல் துறையிடம் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டனர்.