வாஷிங்டன், செப்.23- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொ துச் சபை கூட்டம் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் தி பீப்பிள்ஸ் ஃபோரம், சோசலிச விடுதலைக் கட்சி, பிரேசில் ஜனநாயக பாதுகாப்பு அமைப்பு, டிசம்பர் 12 இயக்கம் மற்றும் பிற அமைப்புகள் இணைந்து செப்டம் பர் 22 அன்று “கியூபாவை வாழ விடுங்கள்!” என கூறி பேரணியை நடத்தின. கியூபாவுக்கு எதிரான முற்று கையை அமெரிக்கா நீக்க வலியுறுத்தி யும் கியூபாவை பயங்கரவாத நாடு பட்டியலில் வைத்துள்ளதை நீக்கக் கோரியும் இந்த பேரணி நடத்தப் பட்டது. அமெரிக்காவின் தடை நடவ டிக்கைகளால் எரிபொருள் மற்றும் மருந்து பற்றாக்குறையை அதிக மாக்கி கியூப மக்களின் வாழ்வை ஆபத்தில் தள்ளியுள்ளது. பொது சபைக்கு வெளியில் இந்த பேரணி நடைபெற்ற போது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு உள்ளேயும் கியூபா மீதான அமெரிக்காவின் முற்று கைக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வெளிப்படையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கியூப நாட்டின் பொருளாதாரம் மற்றும் கியூப மக்களுக்கும் 60 ஆண்டு களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பொருளாதாரத் தடையை நீக்கு மாறு தென்னாப்பிரிக்கா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா சபையில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.பிரேசில் ஜனாதி பதி லூலா ,கொலம்பியாவின் ஜனாதி பதி குஸ்டாவோ பெட்ரோ உள்ளிட்ட தலைவர்களும் அமெரிக்காவின் கியூபா மீதான தடையை நீக்க வலியுறுத்தி உரையாற்றினர். சர்வதேச மக்கள் பேரவை (the International Peoples’ Assembly), தென் அமெரிக்க மக்களுக்கான பொ லிவேரியன் கூட்டணி இயக்கம் (ALBA Movimientos), அமெரிக்கா வின் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் பல இடதுசாரி முற்போக்கு அமைப்புகள் கியூபாவை பயங்கர வாத நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கவும், கியூபா மீதான அமெரிக்கா வின் ஒருதலைப்பட்ச தடையை நீக்க வும் “கியூபாவை வாழ விடுங்கள்” என்ற பிரச்சாரத்தை நடத்தி வரு கிறது. உலகம் முழுவதும் 10 லட்சம் கையெழுத்துக்களை பெற்று சமர்ப்பிப்பதே இந்த பிரச்சாரத்தின் குறிக்கோள் ஆகும்.