புதுதில்லி, ஏப். 26 - உக்ரைன் - ரஷ்யா இடையே மோதலை ஏற்படுத்திய அமெரிக்கா, அந்த மோதலையே காரணமாக வைத்து, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது உலகளவில் பொருளாதார நட வடிக்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்தி அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் உயர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனொரு பகுதியாக, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எண்ணெய்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன. குறிப்பாக சூரிய காந்தி எண்ணெய்யின் (Sunflower Oil) சில்லரை விற்பனை விலை வெகுவாக அதிகரித்து உள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை கண்காணிப்புப் பிரிவுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியா, ஆண்டொன்றுக்கு சுமார் 2.5 மில்லி யன் மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய்யைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில், பனை (8-8.5 mt), சோயா பீன் (4.5 mt) மற்றும் கடுகு (3 mt) ஆகிய வற்றிற்குப் பிறகு நான்காவதாக அதிகம் நுகரப்படும் சமையல் எண்ணெய்யாக சூரிய காந்தி உள்ளது. இதில், 50 ஆயிரம் டன் சூரியகாந்தி எண்ணெய்யை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் இந்தியா, மீதமுள்ளவற்றில் பெரும் பகுதியை உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
வர்த்தக அமைச்சகத் தரவுகளின் படி, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 2019-20 நிதியாண்டில் 2.5 மில்லியன் டன்னாகவும், 2020-21 நிதியாண் டில் 2.2 மில்லியன் டன்னாக வும் இருந்தது. இந்த மொத்த இறக்குமதி யில், உக்ரைனிடமிருந்து மட்டும் 2019-20 நிதி யாண்டில் 1.47 பில்லியன் டாலர் மதிப்பிலான 1.93 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும், 2020-21 இல் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான 1.74 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட்டது. அதுபோலவே ரஷ்யாவிடமிருந்து, 2019-20 நிதியாண்டில், 287 மில்லியன் டாலர் மதிப்பில் 0.38 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும், 2020-21 நிதி யாண்டில் 235.89 மில்லியன் டாலர் மதிப்பில், 0.28 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட் டது. ஆனால், தற்போது ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் காரணமாக, இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டு, சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இது சந்தையில் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது.
போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் இந்த விலை படிப்படி யாக அதிகரித்து, ஒரு லிட்டர் பாக்கெட் ரூ. 165 முதல் 178 வரை உயர்ந்தது. சில்லரை விலைக் கடைகளில் ரூ. 196-க்கு விற்கப்பட்டது. இதே போல பாமாயில் விலையும் லிட்டர் ரூ. 125-க்கு விற்கப்பட்டது, ரூ.170 ஆக உயர்ந்தது. இந்நிலையில், கடந்த வாரத்தில் சூரியகாந்தி, பாமாயில், டால்டா போன்ற சமையல் எண்ணெய் கள் மேலும் லிட்டருக்கு ரூ. 10 முதல் ரூ. 15 வரை அதிகரித்துள்ளது. இதனால், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டர் ரூ. 200 ஆக அதிகரித்துள் ளது. ரூ. 180-க்கு விற்கப்பட்டு வந்த பாமாயில் ரூ. 195 ஆக அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் லிட்டருக்கு ரூ. 5 ரூபாய் கூடுதலாக வும், பாமாயில் ரூ. 15, டால்டா ரூ. 10 என விலை கூடியுள்ளது. இந்த புதிய விலை உயர்வுக்கு, இந்தோனே ஷியா அரசு அந்நாட்டில் பாமாயில் ஏற்று மதிக்கு தடை விதித்ததே காரணமாக கூறப்படு கிறது.
இந்தோனேசிய பாமாயில் ஏற்றுமதி யாளர்கள் தங்களின் திட்டமிட்ட ஏற்றுமதியில் குறைந்தது 20 சதவிகிதத்தை உள்நாட்டுச் சந்தை யில் விற்க வேண்டும் என்பது அந்நாட்டில் கட்டா யம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பாமாயில் விலை அதிகரித்து, அது அனைத்து சமையல் எண்ணெய்யின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். விலை உயர்வு காரணமாக, எண்ணெய் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கும் வர்த்தகர்கள், எனினும், இந்தோனேஷிய அரசின் ஏற்றுமதி தடை என்பது தற்காலிகம்தான்; அவர்களால் நீண்ட நாட்களுக்கு ஏற்றுமதியை நிறுத்தி வைக்க முடி யாது என்பதால், விரைவில் பாமாயில் ஏற்று மதி தடையை இந்தோனேஷியா அரசு நீக்கும் என்று எதிர்பார்க்கிறோம்; அவ்வாறு தடை நீங்கும் பட்சத்தில் வழக்கம்போல் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகின்றனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், காய்கறிகள், தானியங்கள், சமையல் எண்ணெய்கள் என இந்தியாவில் விலை உயரும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதுபோதாது என்று மோடி அரசு தன்பங்கிற்கு அப்பளம், வெல்லம் என அன்றாடப் பயன்பாட்டில் இரு க்கும் 143 பொருட்களின் ஜிஎஸ்டி-யையும் உய ர்த்தி மக்களைப் பழிவாங்கத் திட்டமிட்டுவருகிறது.