தெலுங்கானாவில் நவம்பர் 30 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறு கிறது. ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான சர்மிளா ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற பெயரில் கட்சியை உருவாக்கி தனித்து போட்டியிடு வதாக அறிவித்தார். அவரது கட்சிக்கு “பைனாகுலர்” சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலை யில், திடீரென சர்மிளா தனது கட்சி போட்டி யிடாது என்றும், காங்கிரஸ் உடன் இணைந்து தேர்தலில் பணியாற்றுவோம் என்றும் அறிவித்துள்ளார். கடந்த மாதம் சர்மிளா தனது கட்சியை காங்கிரஸோடு இணைக்கும் முயற்சியில் இறங்கி, முதல்வர் பதவி, காங்கிரஸ் கட்சி யின் தெலுங்கானா மாநிலத் தலைவர் பதவியை கோரினார். ஆனால் இதற்கு தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்கும் முடிவை சர்மிளா கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.