states

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஜனாதிபதி மாளிகையை  சூடான் ராணுவம் மீட்டது 

சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள ஜனா திபதி மாளிகையை கைப்பற்றியதாக அந் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. அந்நாட்டின் துணை ராணுவப்படைக்கும், ராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இப்போரின் ஒரு பகுதியாக கடந்த 2024 இல் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையை துணை ராணுவப்படை கைப்பற்றியது. அதன் பிறகு பல முக்கிய நகரங்களை துணை ராணுவம் கைப்பற்றிய இந்நிலையில் தற்போது ஜனாதிபதி மாளிகையை மீட்டுள்ளது ராணுவம்.

வடகொரியா சென்ற ரஷ்ய  பாதுகாப்புத் துறை செயலாளர் 

ரஷ்ய பாதுகாப்புத் துறை செயலாளர் செர்ஜி ஷோய்கு வடகொரியாவிற்கு சென்றுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த நடவடிக்கைகள் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில் இப்பயணம் அமைந்துள்ளது. வடகொரியா இப்போரில் ரஷ்யாவிற்கு தொடர் ஆதரவுகளை கொடுத்து வந்தது. குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் வீரர்களை வழங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் வடகொரியா  தலைநகர் பியாங்யாங்கில் ஜனாதிபதி கிம் ஜாங் உன் மற்றும் உயரதிகாரிகளை செர்ஜி சந்தித்துள்ளார்.  

பாகிஸ்தானில் தற்காலிக   ஸ்டார்லிங்க் சேவை

ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணைய சேவைக்கு தற்காலிக அனுமதி கொ டுத்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. லோ எர்த் ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள்கள் வழியாக இணைய சேவையை வழங்கும் நிறுவ னங்களில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறு வனம் தொழில்நுட்ப ரீதியாக முதன்மையான நிறுவனமாக உள்ளது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் உத்தரவைத் தொடர்ந்து ஸ்டார் லிங்க் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஷாசா பாத்திமா தெரிவித்துள்ளார்.

சிரியா விமானப்படைத்தளங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு   

சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் உள்ள பல்மைரா மற்றும் தியாஸ் (டி4) ராணுவ விமா னத் தளங்களில் இஸ்ரேல் குண்டு வீசி தாக்கு தல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறு திப்படுத்தப்பட்டுள்ளது. சிரியாவை பயங்கரவாதி கள் படை கைப்பற்றிய பிறகு ராணுவத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் ராணுவ திறன் களை அழிக்கும் வேலையை இஸ்ரேல் தொ டர்ந்து செய்து வருகிறது. இதற்கு சிரியாவின் தற்போ தைய அரசு கடுமையான எதிர்வினையாற்ற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு  தயாராக உள்ளார் : கார்னி 

வர்த்தகப் போரால் அமெரிக்கர்கள் பாதிக்கப்படப் போகிறார்கள். இதனால் விரிவான வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடாவின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பார் என்றும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக நமக்கான மரியாதை கிடைக்கும் வரை, டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடக்காது எனவும் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

பனிப்பாறைகள் பாதுகாப்பு சர்வதேச ஆண்டு: ஐ.நா.அறிவிப்பு 

2025 மார்ச் 22 அனுசரிக்கப்படும் உலக தண்ணீர் தினத்தை ஐநா அவை பனிப்பாறைகளை பாதுகாப்பதற்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது. உலகின் 70 சதவீதம் வரையிலான நல்ல தண்ணீர் பனிப் பாறைகளாக உள்ளன. ஆர்டிக் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர்க்கும் அதிகமான பனிப்பாறைகள் மற்றும் பூமியின் வட துருவத்தில் உள்ள பனிப் பாறைகளை பாதுகாப்பதற்கான உறுதியை ஐ.நா அவை ஏற்றுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சுகாதாரமான நீரை உறுதி செய்யும் நிலையான வளர்ச்சி இலக்கு ஐநா அவையால் கடந்த காலங்களில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.   காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமி மிக அதிகளவு வெப்பமடைவதால் பனிப்பாறைகள் முன்னெப்போதையும் விட வேகமாக உருகி வரு கின்றன. இதனால் பனிப்பாறைகள் வேகமாக உரு குவதுடன் பூமியின் நீர் சுழற்சி முறையை கணிக்க முடியாததாகவும் தீவிரமானதாகவும் ஆக்குகிறது. இதனால் வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு மற்றும் கடல் மட்ட உயர்வு, சுற்றுச்சூழல் அமை ப்பின் சிதைவு என மிக மோசமான இயற்கைப் பேரழிவு உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  

 உலகில் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி சிதைவடையாமல் இருக்க சுற்றுச்சூழல் அமைப்பு சிதையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்காக பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்கும், மக்களுக்கும் பூமிக்கும் ஏற்பட உள்ள பேரழிவை தடுப்பதற்காகவும் பனிப்பாறைகள் உருகி வருவதை கட்டுப்படுத்தவும் நாம் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என ஐநா அவை தெரிவித்துள்ளது. ஒரு புறம் பனிப்பாறைகள் உருகிவரும் அதே நேரத்தில் மற்றொரு புறம் போதிய அளவு சுத்தமான தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இந்தியாவில் நிதி ஆயோக் அறிக்கையின்படி ஏறக்குறைய 60 கோடி  இந்தியர்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 2,00,000 பேர் பாதுகாப்பான தண்ணீர் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர்.  தில்லி, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை அனுபவித்து வருகின்றனர். இது எதிர்காலத்தில் இன்னும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.