புதுதில்லி, மார்ச் 8- உக்ரைன் மீதான ரஷ்யா வின் ராணுவ நடவடிக்கை யால், சர்வதேச அளவில் வர்த்த கச் சந்தைகள் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுள் ளன. குறிப்பாக, இந்திய பங்குச் சந்தையிலிருந்து நிதி மூலதனம் தொடர்ந்து வெளியேறுவதால், அமெரிக்க டாலருக்கு இணை யான இந்திய ரூபாய் கடும் சரி வைச் சந்தித்து வருகிறது. இது இந்திய பொருளாதாரத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தி விலை வாசியும் வழிகோலியுள்ளது. இந்நிலையில், இந்த விவகா ரத்தில் ரிசர்வ் வங்கி என்ன செய்கி றது? என்று பாஜக மூத்த தலை வரும், அக்கட்சியின் எம்.பி. யுமான சுப்பிரமணியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். “வெறும் ஒரு வாரத்தில் இந்தியாவின் ஜிடிபி அமெரிக்க டாலர் மதிப்பில் 3 டிரில்லியன் டாலர் அளவில் இருந்து 2.9 டிரில்லியன் டாலராகச் சரிந்துள் ளது. அமெரிக்க டாலருக்கு எதி ரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தால் ஜிடிபி 2.8 டிரில்லியன் டாலராகச் சரியும். இப்படித் தொடர்ந்து குறைந்தால் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் கனவைக் கட்டாயம் அடை வது கஷ்டமாகிவிடும். இந்தி யாவில் 640 பில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலா வணி உள்ளது. ரிசர்வ் வங்கி ஏன் இன்னும் தலையிடாமல் உள்ளது?” என்று சுப்பிரமணிய சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.51 சதவிகி தம் அதிகரித்து 121.37 டாலராக வும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.98 சதவீதம் அதிகரித்து 125.65 டாலராக உள்ளது. அமெ ரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு வர லாற்று சரிவை பதிவு செய்து உள்ளது, நாணய சந்தையில் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு 76.76 ஆகச் சரிந் துள்ளது.