மும்பை, ஆக. 31 - எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, ‘இந்தியா’வின் (I-N-D-I-A) மூன்றாவது கூட்டம் வியாழனன்று துவங்கியது. மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட் ஹோட்டலில், மாலை 6 மணிக்குத் துவங்கிய இந்தக் கூட்டத் தில் 28 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 63 தலைவர்கள் கலந்து கொண்டனர். பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தை காங்கிரஸ் கட்சி தலைமை வகித்து நடத்திய நிலையில், மும்பை கூட்டத்தை காங்கி ரஸ், உத்தவ் தாக்கரே தலைமையி லான சிவசேனா (யுபிடி) மற்றும் சரத் பவார் தலைமையிலான என்சிபி ஆகிய மூன்று கட்சிகளை உள்ளடக் கிய ‘மகா விகாஸ் அகாதி’ (எம்விஏ) ஒருங்கிணைத்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூ கம், கூட்டணியில் மேலும் கட்சிகளை இணைப்பது, பொது குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவது, கூட்டணிக்கான இலச்சினையை வெளியிடுவது ஆகிய நிகழ்ச்சி நிரல் களின் அடிப்படையில் மூன்றாவது கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந் தது.
மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வ மற்ற கூட்டம் துவங்கியது. இதில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார் ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசியச் செயலாளர் து. ராஜா, ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், தேசியவாத காங்கிரஸ் தலை வர் சரத் பவார், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டா லின், திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதாதளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங், அமைச்சர் சஞ்சய் குமார் ஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் 8 மணிக்கு நிறை வடைந்தது. அதைத் தொடர்ந்து, ‘இந் தியா’ கூட்டணியின் தலைவர்களுக்கு சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே இரவு விருந்தளித்தார். இத் துடன் முதல்நாள் அமர்வு நிறைவு பெற்றது. வெள்ளிக்கிழமையன்று காலை 10.15 மணிக்கு இந்தியா கூட்டணி தலை வர்களின் புகைப்பட எடுக்கும் அமர்வு டன் அதிகாரப்பூர்வ கூட்டம் துவங்கு கிறது. 10.30 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை கூட்டம் தொடர்ந்து நடை பெறுகிறது. அப்போது ‘இந்தியா’ கூட்டணிக்கான இலச்சினை வெளி யிடப்படுகிறது. பிற்பகல் மதிய உண வுக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்திக்கும் ‘இந்தியா’ கூட்டணி தலை வர்கள், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்க உள்ளனர்.