states

சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்குக!

சென்னை, மார்ச் 19- சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என பொ துப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலா ளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: நிதியமைச்சர் மிகவும் உணர்ச்சிமிக்க உரையுடன் பல சிறப்பு அம்சங்கள் கொண்ட நிதிநிலை அறிக் கையை தாக்கல் செய்துள் ளார்.‌ தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்க ளுக்கு பாடநூல் கட்டண மில்லாமல் வழங்கப்படும்; பெண்கள் கல்வியைத் தொடர்வதை ஊக்கப் படுத்தும் வகையில் உதவித் தொகை உள்ளிட்ட நல்ல அறி விப்புகள் கொண்டுள்ளதை வரவேற்கிறோம். மாதிரிப் பள்ளி, திறன் வளர்ச்சி, உயர் தொழில் நுட்பக் கல்லூரிகளில் சேர்வ தற்கு சிறந்த பயிற்சிகள் வழங்கக்கூடிய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி களில்‌ மாணவர்களுக்குப் பயிற்சி போன்ற அறிவிப்பு கள் சமூகத்தில் ஏற்கனவே நிலவும் தவறான புரிதலை உறுதிப்படுத்தும்.

இது இந்திய அரசமைப்புச் சட்டம் முன்வைக்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கு ஏற்புடைய தல்ல. இத்தகைய பள்ளிக ளில் படிக்கும் மாணவர்கள் தான் கற்றல் செயல்பாட்டில்  திறனும், ஆர்வமும் கொண்ட வர்கள்; மற்றவர்கள் உயர் கல்வி செல்ல உரிய ஆர்வ மும், போதிய கற்றல் திறனும் அற்றவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். கலைஞரின் சமச்சீர் கல்வி நோக்கம் அனைத்து குழந்தைகளும் பாகுபா டில்லாமல் நடத்தப்பட வேண்டும் என்ற கோட் பாட்டை அடிப்படையாகக் கொண்டது.  சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்துவதே சுயமரி யாதை இயக்கம் முன்வைத்த திராவிட மாதிரி. அந்நியப் பல்கலைக் கழகங்கள் குறித்த அறிவிப்பு கள் சர்வதேச நிதி மூலதனத் தின் லாப வேட்டைக்கு உயர் கல்வித் துறையைத் திறந்து விட வழிசெய்யும். நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து தாக்கலாக இருக்கும் பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித்துறை கொள்கை குறிப்புகளிலாவது சம மான கற்றல் வாய்ப்பை உறு திப்படுத்த உரிய நடவடிக்கை கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.