புதுதில்லி,ஜன.9- மும்பை குடிசைவாசிகளின் வாழ்க்கை நிலை குறித்து கவலையை தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்பையில் குடிசைவாசிகள் வாழ்க்கை நிலை குறித்து வந்த புகாரை அடுத்து அது குறித்து மகாராஷ்டிரா அரசு, ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினோம். இதில் மகாராஷ்டிரா அரசு தலைமை செயலாளர் மூலம் பதில் அளித்தது. அதில் குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களு க்கு வீடு வழங்க மாநில அரசு, ஒன்றிய அரசு உதவியுடன் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் மூலம் பல முயற்சி கள் மேற்கொண்டது. எனினும் நிதிப்பற்றாக் குறை தடையாக உள்ளது என கூறப் பட்டுள்ளது. இதேபோல ஒன்றிய அரசு அனுப்பிய பதிலில் மகாராஷ்டிராவில் 2.24 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதில் மும்பைக்கு மட்டும் 2 லட்சம் வீடுகள் ஒதுக்கப்பட்டன என்று கூறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில தலைமை செயலாளர், ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.