states

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி ஒப்படைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமலாக்க, ஒன்றிய பாஜக அரசின் நிர்ப்பந்தம் காரணமாக வங்கி நிர்வாகம் மறுத்து வருகிறது.  இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்துள்ளது வழக்கு திங்களன்று விசாரணைக்கு வருகிறது.  இதை விசாரிக்கும் நீதிமன்றம், சாதகமான உத்தரவினை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஊழலை சட்டப்பூர்வமாக மாற்றியிருக்கும் பாஜக அரசின் செயலுக்கு எதிராக, அரசியல் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதத்தில் ஒரு தீர்ப்பு கிடைக்கப் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.