states

img

காங்கிரஸ் எம்.பி.யை இழிவுபடுத்திய நிர்மலா சீதாராமன்;

தொகுதியில் வசிக்கும் மக்கள் எம்.பி.க்களை சாதி, மதம் பார்த்து தேர்வு செய்வது இல்லை. அவையில் எந்தவொரு எம்.பி.யின் சாதி, மதத்தையும் குறிப்பிட்டு உறுப்பினர்கள் பேசக் கூடாது.

புதுதில்லி, டிச.13- சாதியை மனதில் வைத்து நிர்  மலா சீதாராமன் பேசியதாக காங்கி ரஸ் எம்.பி. ஏ.ஆர்.  ரெட்டி முன்  வைத்த குற்றச்சாட்டைத் தொட ர்ந்து, “அவையில் பெயருக்கு பதில் சாதி, மதத்தைக் குறிப்பிட்டு பேசக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா  எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி முதல் துவங்கி நடை பெற்று வருகிறது. இதில், திங்க ளன்று நடைபெற்ற கேள்வி நேரத்  தின்போது, தெலுங்கானா காங்கி ரஸ் எம்.பி. ஏ.ஆர். ரெட்டி பேசினார்.  அப்போது, “டாலருக்கு எதி ரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிய டைந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி யில் இதுபோன்ற நிலை ஏற்பட்ட போது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தார். அப்போது இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியூ வில் இருப்பதாக அவர் விமர்சித் தார்’’ என்றார்.  இதற்கு பதிலளித்த நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன், “இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும்போல் மிகவும் வலுவாக இருக்கிறது. பிற  நாடுகளின் நாணயத்தை விடவும் வலுவாக இருக்கிறது. டாலர் - ரூபாய் மதிப்பு ஊசலாட்டத்தை தவிர்க்க ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி இருப்பை பயன்படுத்தி  தீர்வு காண முற்பட்டுள்ளது. ஆனால் சிலருக்கு இந்தியப் பொருளா தார வளர்ச்சியைக் கண்டு பொறாமை’’ என்று கூறினார். மேலும், “காங்கி ரஸ் எம்.பி. அரைகுறை இந்தியில் பேசியதால், தானும் அவருக்கு அதேபோல் அரைகுறை இந்தி யில்தான் பதிலளிப்பேன்’’ என்றும் ஆணவமாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது காங்கிரஸ் எம்.பி. ஏ.ஆர். ரெட்டியை ஆவேசத்திற்கு உள் ளாக்கியது. நான் தாழ்ந்த சாதி எனக் கூறப்படும் சமூகத்தில் இருந்து வந்தவன் என்பதை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலேயே எனது இந்தி மொழிப் புலமை குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேலி செய்கிறார் என்று ஏ.ஆர். ரெட்டி குற்றம் சாட்டினார்.  அப்போது குறுக்கிட்ட சபாநாய கர் ஓம் பிர்லா, “தொகுதியில் வசிக்  கும் மக்கள் எம்.பி.க்களை சாதி, மதம் பார்த்து தேர்வு செய்வது இல்லை. அவையில் எந்தவொரு எம்.பி.யின் சாதி, மதத்தையும் குறிப்பிட்டு உறுப்பினர்கள் பேசக்  கூடாது.

மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.  கடந்த 2019ல் நாடாளுமன் றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்  மலா சீதாராமன் வெங்காயம் குறித்து கூறியிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சி யின் எம்.பியான சுப்ரியா சுலே இதுதொடர்பாக பேசும்போது, “வெங்காய பதுக்கல் காரண மாக விலை தாறுமாறாக அதிகரித்தி ருக்கிறது. ஆனால், இதுகுறித்து ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. உடனடியாக விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.  இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், “நான் வெங்கா யம் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு அதிகம் சாப்பிடும் குடும்பத்திலிருந்து நான் வரவில்லை. எனவே இதுகுறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். விலையை பொறுத்தளவில் அதனை கட்டுக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது” என்று தனது பிராம ணர் சாதியைக் குறிப்பிட்டு பேசியி ருந்தார். இது அப்போது சர்ச்சை யை ஏற்படுத்தியது.  அதுமட்டுமல்லாமல், திங்க ளன்றும், “நான் வெங்காயம் சாப்  பிட மாட்டேன். ஆனால் வெங்கா யம் சாப்பிடுபவர்களின் பிரச்சனை களுக்காகவும் பேசுகிறேன்” என்று குலப்பெருமை (?!) பேசினார் என்  பது குறிப்பிடத்தக்கது.