states

முழுமையடைகிறது விண்வெளி நிலையம்: சீனா உறுதி

பெய்ஜிங், ஜன.7- விண்ணில் கட்டப்பட்டு வரும் விண்வெளி நிலையம் 2022 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்படத் துவங்கும் என்று சீனாவின் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளின் முயற்சியால் சர்வதேச நிலையம் விண்வெளியில் இயங்கி வருகிறது. 1998 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையம் இரண்டு பிரிவாக செயல்படுகிறது. ஒன்றை அமெரிக்காவும், மற்றொன்றை ரஷ்யாவும் இயக்கி வரு கின்றன.  மற்ற நாடுகளோடு ஒத்துழைத்தாலும், இந்தத் திட்டத்தில் சீனாவை இணைத்துக் கொள்ள அமெரிக்கா மறுத்து வந்தது. 

2011 ஆம் ஆண்டில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டது. தேசப்பாதுகாப்பை மனதில் கொண்டு சீனாவை சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தில் இணைப்பதில்லை என்று அந்தத் தீர்மானம் முடிவு செய்தது. இதனால் சீனா தனக்கென்று தனியாக ஒரு நிலை யத்தை விண்வெளியில் அமைப்பதென்று முடிவெடுத்தது. தனது திட்டத்தை ஏப்ரல் 2021ல் சீனா துவக்கியது.  2022 ஆம் ஆண்டில் 40க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் விண்கலன்களை சீனா அனுப்பப் போகிறது. தான் திட்டமிட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலை யத்திற்குத் தேவையான பொருட்களை அனுப்ப இரண்டு சரக்கு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளார்கள். 

இரண்டு ஆய்வு மையங்கள் அடங்கிய விண்கலத்தை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ள சீனா திட்டமிட்டுள்ளது. மிகவும் கச்சிதமாக உருவாக்கப்பட்டு வரும் லாங் மார்ச்-6ஏ ராக்கெட்டும் தனது முதல் பயணத்தை 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளவிருக்கிறது.