states

திருமணத்திற்கு சென்று திரும்பிய ஆறு பேர் விபத்தில் பலி

லக்னோ, ஏப்.18- உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் பயணித்த ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் பலியாயினர். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் நசிராபாத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு  ஜீப்பில் திங்களன்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.   அமேதியின் பாபுகஞ்ச் சகாரா ஆசிரமம் பகுதியில் பயணித்தபோது, சாலையின் மறுபுறம் வேகமாக வந்த லாரி ஜீப் மீது மோதியது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த கல்லு  (40), அவரது மகன் ஷவுரப் (8), கிருஷ்ண குமார் சிங் (30), ஷிவ் மிலன், ரவி திவாரி, திரிவேணி பிரசாத் ஆகியே ஆறு பேர் பலியாகினர். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.