states

img

திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது வன்முறை பாஜக குண்டர்கள் வெறியாட்டம்

புதுதில்லி ஜன.20-  திரிபுராவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழி யர்களுக்கு எதிராக ஆளும் கட்சி யின் பாஜக குண்டர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ள  வன்முறை வெறியாட்டங் கள் தொடர்பாக ஒரு மனுவை, தில்லி யில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணை யரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி தலைமையில் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோ த்பல் பாசு, மத்திய செயற்குழு உறுப்பி னர் முரளிதரன் ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர் அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: 

திரிபுராவிற்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முழுக்குழு சென்று வந்த பின்னர், அங்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட  எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும், முன் னணி ஊழியர்கள் மீதும் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது. திரிபுரா சென்ற தேர்தல் ஆணையமானது, அங்குள்ள மக்களி டம் வன்முறையற்ற முறையில் நியாய மாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதிமொழி அளித்த அடுத்த ஒருசில தினங்களி லேயே இத்தகைய வன்முறை வெறி யாட்டங்கள் நடந்திருப்பது முரணாக இருக்கிறது. திரிபுரா மாநில தேர்தல் ஆணையர், வன்முறையற்ற முறையில் தேர்தல் நடைபெறும் என்று கூறி யிருந்தார். எனினும், மாநில நிர்வாக மும், குறிப்பாக மாநிலக் காவல்துறை யும் தலைமைத் தேர்தல் ஆணையம் அளித்திட்ட உறுதிமொழிகளை மறந்து விட்டு, செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வன்முறை  வெறியாட்டங் கள் மூர்க்கத்தனமாக அதிகரித்திருக் கின்றன. வன்முறை நடைபெறும் பாணி என்பது மக்கள் மத்தியில் அச்ச  உணர்வை ஏற்படுத்தும் நோக்கத் தோடு நடைபெறுவது தெளிவாகத் தெரி கிறது. இந்த வன்முறை  வெறியாட்டங் கள், அங்கே  நேர்மையாகவும் நியாய மாகவும் தேர்தல் நடைபெறுவதற்கான சூழலைப் பாழ்ப்படுத்திக் கொண்டி ருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகளின் பட்டியலை இத்துடன் இணைத்திருக்கிறோம்.

தேர்தல் நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுத்திடுக!

திரிபுரா மாநிலத்தில் நேர்மையாக வும் நியாயமாகவும் தேர்தல் நடத்து வதற்குத் தேவையான நடவடிக்கை களை உடனடியாகத் தாங்கள் மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்து கிறோம். தேர்தல் ஆணையம் இவற்றின் மீது  உறுதியாகவும் தீர்மானகரமான முறை யிலும் நடவடிக்கைகள் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர், வீடுகள், அலுவலகங்கள் மீது தாக்குதல்  மேற்படி மனுவில் கண்டுள்ளபடி, 2023 ஜனவரி 11-க்குப் பின் திரிபுராவில்  மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறை வெறியாட்டங்களின் விவரங்கள் வருமாறு: 12.1.2023 அன்று கோமதி மாவட்டத் தில் உதய்பூர் நகரத்தில் அஞ்சல் பங்களா சாலையில் அமைந்துள்ள கீதா ராணி தாஸ், அஜித் சந்திரபால், சதாம் பால், ஷ்யாமா தாஸ் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களின் வீடும் நாசமாக்கப்பட்டது. 14.1.2023 அன்று கோமதி மாவட்டத் தில் உதய்பூர் மாடாபாரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலு வலகம் முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப் பட்டது. 15.1.2023 அன்று தெற்கு திரிபுரா வில், சாந்திர்பசாரில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரான ஸ்ரீமந்த தேவ் என்னும் 75 வயது முதியவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் தலையில் தாக்கியுள்ளார்கள். இப்போது அவர் அகர்தலாவில் உள்ள ஜி.பி.பாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

18.1.2023 அன்று தெற்கு திரிபுரா வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கூட்டத்திற்குச் சென்று திரும்பிய தோழர்கள் அஜாய் தாஸ், சுமன் நாமா, பிரனாய் பால், கௌரங்கா தேவ்நாத் முதலானவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். சோனே என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே தினத்தில் தெற்கு திரிபுரா, பெலோனியாவில் சட்டமன்ற  உறுப்பினராக உள்ள சுத்தன்தாஸ் அவர் களைத் தாக்க முயற்சித்துள்ளனர். எனினும் இத்தாக்குதலில் இருந்து அவர் தப்பிவிட்டார். மேற்கு திரிபுராவில் ஜிரானியா எஸ்.என்.காலனியில் இடது முன்னணியின் முன்னாள் அமைச்சர் மாணிக் தேய் கூட்டத்தில் ஆளும் கட்சி குண்டர்கள் தாக்குதல் தொடுத்தனர். எனினும் காவல்துறையினர் அவர்களின் தாக்கு தலை முறியடித்துள்ளனர். மேற்கு திரிபுராவில், ஜிரானியா வில், காங்கிரஸ் கட்சியின் தலைவரான டாக்டர் அஜாய் குமார் தாக்கப்பட்டார். கமல்பூர் தலாய் மாவட்டத்தில் பிரஞ் சித் நமசுத்ரா என்பவர் கொல்லப்பட்டுள் ளார். 19.1.2023 அன்றிரவு மேற்கு திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளது. (ந.நி.)