states

img

ஜோகன்னஸ்பர்க்கில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க், (தென்னாப்பிரிக்கா) ஜூலை 10- தென்னாப்பிரிக்காவில் ஜோகன் னஸ்பர்க் மாகாணத்தின் சோவெட்டோ  நகரில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்;  மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.  ஒரு மினி வேனில்  வந்த நபர்கள் சனிக்கிழமை  உணவகத்தில் இருந்த வர்கள் மீது துப்பாக்கிடுச்சூடு நடத்திய தாக காவல்துறைக்கு தகவல்  கிடைத்தது. இதையடுத்து  சம்பவ  இடத்திற்குச் சென்ற  காவல்துறை யினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த னர். இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் காயமடைந்தனர். இவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.  இந்தத் தகவலை  கௌதெங் மாகாண காவல் ஆணையர் லெப்டினன்ட் ஜெனரல் எலியாஸ் மாவேலா தெரிவித்துள்ளார்.