மும்பை, ஜன. 2 - ராமர் கோயில் விவகாரம் முடிந்து விட்டதால், தற்போது, ‘லவ் ஜிகாத்’ தை பாஜக ஊதிப் பெரிதாக்குகிறது; இதன்மூலம் இந்துக்களை அச்சுறுத் தலில் வைத்திருக்க முயற்சிக்கிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இதுதொடர்பாக சாம்னா ஏட்டில் அவர் கூறியிருப்பதாவது; “கடந்த 2022-ஆம் ஆண்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தலைமைக்கு ஒரு புதிய ‘ஒளியை’ கொடுத்துள்ளது. 2023-ஆம் ஆண்டி லும் இந்தப் போக்கு தொடர்ந்தால், அடுத்த பொதுத் தேர்தலில் நாடு அரசியல் மாற்றத்தைக் காணக் கூடும். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ‘வெறுப்பு மற்றும் பிரிவினையின் விதைகளை’ விதைக்கின்றனர். ராமர் கோவில் விவகாரம் தீர்க்கப் பட்டுவிட்டதால், இந்த விவகாரத்தில் வாக்கு கேட்க முடியாது. எனவே, புதிய ‘லவ் ஜிஹாத்’ கோணம் ஆராயப்பட்டு வருகிறது.
இந்த ‘லவ் ஜிகாத்’ ஆயுதம், தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறதா?. கடந்த மாதம் நடிகை துனிஷா சர்மாவின் மரணம் மற்றும் ஷ்ரத்தா வால்கர் அவரது காதலரால் கொல்லப்பட்டது, இவை “லவ் ஜிகாத்” வழக்குகள் அல்ல. ஆனால் எந்தவொரு சமூகம் அல்லது மதத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் அட்டூழியங்களைச் சந்திக்கக்கூடாது. 2023 ஆம் ஆண்டில் நாடு ‘பய மற்றதாக’ இருக்கும் என்று நம்பு கிறேன். நடப்பது அதிகார அரசியல். ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி யடைந்து அதன் நோக்கத்தை அடை யும். ‘குறுகிய மனப்பான்மையை ஒழிக்க வேண்டும்’ என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், பாஜக-வின் ஆட்சியில்தான் இந்த அணுகுமுறை வளர்ந்துள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளின் இருப்பு மற்றும் உரிமைகளை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவை உருவாக்குவது ‘புதிய பிரி வினைக்கு’ வழிவகுக்கும். வேலை யின்மை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் பாஜகவால் ஒதுக்கித் தள்ளப்பட்டுவிட்டன.” இவ்வாறு சஞ்சய் ராவத் எம்.பி. தெரிவித்துள்ளார்.