ஐதராபாத், நவ.23- தெலுங்கானா அரசை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்திற்காக எம் எல்ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பிடிஜேஎஸ் தலைவரும், கேரள பாஜக கூட்டணி அமைப்பாளருமான துஷார் வெள்ளப்பள்ளிக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப் பிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாஜக தேசிய பொதுச் செயலா ளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் ஜக்கு சுவாமிக்கும் தெலுங் ங்கானா சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) எம்எல்ஏக் களுடன் துஷார், போனில் பேசும் வீடியோ காட்சிகள் அண்மையில் வெளியானது. தென் மாநிலங்களின் பொறுப்பாளரான பாஜக தேசிய இணைப் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோ ஷிடம் பேச வாய்ப்பு தருவ தாக எம்எல்ஏக்களுக்கு துஷார் உறுதியளித்த வீடி யோ வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா வின் முகவராக துஷார் வெள்ளப்பள்ளி தெலுங் கானா சட்டமன்ற உறுப்பி னர்களுக்கு தலா ரூ.100 கோடி வழங்க முயன்றதாக முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அண்மையில் செய்தி யாளர் கூட்டத்தில் தெரி வித்திருந்தார். முகவர்கள் கூறியதாக கசிந்த உரையாடலில், பாஜக அல்லாத எட்டு மாநிலங்களில் இதே போன்ற ஆட்சிக் கவிழ்ப்பு களை நடத்தியது அம்பல மானது. அது எப்படி திட்ட மிடப்பட்டது என்பதையும் அந்த உரையாடல் விவ ரிக்கிறது. தெலுங்கானா, தில்லி, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளை கவிழ்க்கவே இந்த நடவடிக்கை என்றும் அவர்கள் அதில் கூறுகின்ற னர். முழு நாசகர நடவடிக்கை களுக்குப் பின்னால் அதே கூட்டணி இருப்பதாகவும், அவர்கள் துஷாரின் அறிவு றுத்தலின்படி செயல்படுவ தாகவும் சந்திர சேகரராவ் குற்றம்சாட்டினார்.