states

கட்டுக்குள் வராத கலவரம் முதல்வர் வீட்டிற்கே பாதுகாப்பில்லை!

ஜூலை 6-ஆம் தேதி  லுவாங்பி லிந்தோய்ங் கம்பி ஹிஜாம் (17) என்ற மாணவியும், பிஜாம் ஹேமன்ஜித் சிங் (20) என்ற மாணவரும் காணா மல் போயினர். இருவரும் மெய் டெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், காணாமல் போன தற்கு மறுநாள், இவர்கள் இரு வரும் ஜூலை 7 அன்று குக்கி ஆதிக் கம் நிறைந்த பகுதியான லாம்டா னில் இருந்தது, மொபைல் சிக்னல் மூலம் தெரியவந்தது. பின்னர் அந்த மொபைல் போனில் புதிய சிம் கார்டு  செருகப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரித்து வருவதாக போலீசார் கூறியிருந்தனர். இந்நிலையில், கடந்த 4 மாதங் களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை செப்டம்பர் 23  அன்று மீண்டும் வழங்கப்பட்ட போது, ஜூலை மாதத்தில் காணா மல் போன மாணவரும், மாணவி யும் சுட்டுக் கொல்லப்பட்டு, பிண மாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி, மணிப்பூர் மாநிலத்தை  மீண்டும் பதற்ற நிலைக்கு கொண்டு சென்றது.  குறிப்பாக, மெய்டெய் சமூ கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் இறங்கி யுள்ளனர். பல இடங்களில் காவல் துறையினருக்கும் மெய்டெய் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இம்பாலின் உரிபோக், தேரா உள்ளிட்ட இடங் களில் போராட்டக்காரா்கள் மீது  தடியடி நடத்தியும் கண்ணீா்ப்புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்தனர்.  

முன்னதாக, மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் பைரேன் சிங், “கடந்த ஒன்றரை மாதங்களாக (மெய்டெய் - குக்கி ஆகிய) இரு தரப்பிலிருந் தும் துப்பாக்கிச் சூடு எதுவும் நடை பெறவில்லை. அமைதி திரும்பி யுள்ளது. இந்நிலையில், மெய்டெய் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்ப வம் சோகமானது. குக்கி தீவிரவாதி கள் செய்தது மிக மோசமான குற்றம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப் படுவதை கண்டிப்பாக உறுதி செய்வோம் என்பதை மணிப்பூர் மக்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.  மேலும், பள்ளத்தாக்கு பகுதி களிலுள்ள 19 காவல்நிலையங் களின் கட்டுப்பாட்டில் உள்ள பகு திகளை தவிர்த்து, மலைப்பகுதி கள் முழுவதும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து, மணிப்பூரை கலவர பூமியாக அம்மாநில பாஜக அரசு அறிவிப்பு  வெளியிட்டது. ஆனாலும் வன் முறைகள் கட்டுக்குள் வருவதாக இல்லை. ஒருபுறம் மெய்டெய் மாண வர்கள் போராடுகிறார்கள் என் றால், மற்றொரு புறம், மெய்டெய் மக்கள் அதிகம் வசிக்கும் பள்ளத் தாக்கு பகுதிகளை விட்டுவிட்டு, குக்கி பழங்குடிகள் அதிகம் வசிக் கும் மலைப்பகுதிகளில் மட்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) மணிப்பூர் அரசு நீட்டித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி பழங்குடியின ரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இம்பாலில் உள்ள ஹெய்ங் காங் பகுதியில், முதல்வரின் குடும்ப சொத்தாக இருக்கும் வீட்டைத் தாக்கி சூறையாடும் முயற்சி நடந்துள்ளது. இருப்பி னும், வீட்டில் இருந்து 100-150  மீட்டர் தொலைவிலேயே வன்மு றைக் கும்பலைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, தெளபால் மாவட்ட த்திலுள்ள பாஜக மண்டல அலு வலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. போலீஸ் வாகனம் ஒன்றுக்கும் தீவைத்த கும்பல், காவலரைத் தாக்கி, அவரிடமிருந்த ஆயு தத்தை பறித்துச் சென்றது. பிரபல மணிப்பூரி மொழி நடிக ரும், பாஜக எம்.பி.யுமான ராஜ்குமார் சோமேந்திரா, வியாழக் கிழமையன்று பாஜக-வில் இருந்து விலகியுள்ளார். மாணவர் கள் கொல்லப்பட்ட விவகாரத்தை ஒன்றிய அரசு கையாண்ட விதத்திற்கு அதிருப்தி தெரிவித்து, அவர், பாஜக-விலிருந்து விலகி யுள்ளார். 2019-இல், இம்பால் மேற்கு மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டி யிட்டு வெற்றிபெற்ற இவர், 2021- ஆம் ஆண்டு பாஜக-வில் இணைந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 2 மெய்டெய் மாண வர்களின் படுகொலைக்கு அமித்ஷாவிடம் நீதிகேட்டு, அந்த சமூகத்தைச் சேர்ந்த 20 எம்எல்ஏ-க்கள் தில்லியில் முகாமிட்டனர். இந்நிலையில், மணிப்பூர் வன் முறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, ஸ்ரீநகரில் பணி யாற்றிவரும் மூத்த ஐபிஎஸ் அதி காரி ராகேஷ் பல்வாலை, ஒன்றிய உள்துறை அமைச்சகம் மணிப்பூ ருக்கு அனுப்பி வைத்துள்ளது. மாணவர்கள் படுகொலை குறித்து, சிறப்பு இயக்குநர் அஜய்  பட்நாகர் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் தங்களின் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.