states

img

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், அனில் அம்பானிக்கு செபி தடை

மும்பை,பிப்.12-  அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மற்றும் பாண்டு வெளியீடு உட்பட செக்யூ ரிட்டீஸ் சந்தையில் பங்கு பெற தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.  அனில் அம்பானி மற்றும் அமித் பாப்னா, ரவீந்திர சுதாகர், பிங் கேஷ் ஆர்.ஷா ஆகியோருக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டில் சில நிறுவனங்க ளுக்கு ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வழங்கிய கடன்கள் குறித்து செபி விசாரணை நடத்துகிறது. விசாரணை தொடங்கவுள்ள நிலையில் அனில் அம்பானி உள்ளிட்டோருக்கு செபி இடைக்கால தடை விதித்துள்ளது.

செபியின் 100 பக்க அறிக்கையில் அனில் அம்பானியின் நிறுவனம் விதிமுறைகளின் மொத்த அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் தனது வரம்பைத் தாண்டி நடந்துகொண்டது தெரியவந்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறு வனத்தில் இருந்து பணத்தை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து இந்த தடையை செபி விதித்துள்ளது. ‘‘நிதியை மாற்றி விடுதல், கணக்கு புத்த கங்களில் தவறாக திருத்தம் செய்தல், நிதிநிலை அறிக்கைகளை பொய்யாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனத்தின் நடத்தை மற்றும் செயல்பாடு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறோம்.

உண்மையான தக வல்களைப் பெருமளவில் பொதுமக்களுக்கு வெளியிடாததும், நிறுவனத்தின் முக்கிய மேலாளர்களால் கூட்டாக முறைகேடுகள், பத்தி ரச் சட்டங்களை மீறுதல் போன்ற செயல் களைத் தொடர்வதை தடுக்க வேண்டிய அவ சரத் தேவை இருப்பதாகவும் அந்த உத்தர வில் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மட்டு மின்றி மொத்தம் 28 தனிநபர்கள் மற்றும் நிறு வனங்களுக்கும் செபி நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அனில் அம்பானி உள்பட தடை விதிக்கப் பட்ட நபர்கள் அனைவரும் செபியுடன் பதிவு செய்துகொண்டுள்ள நபர்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறு வனங்கள், அந்நிறுவனங்களின் இயக்கு நர்கள், புரமோட்டர்கள் அனைவரிடமும் தொடர்புவைத்துக்கொள்ளக் கூடாது என்றும் செபி தெரிவித்துள்ளது.