states

img

உலகின் 4-ஆவது பெரும்பணக்காரர் மோடியின் நண்பர் அதானி!

புதுதில்லி, ஜூலை 19 - உலகின் பெரும்பணக்காரர் பட்டியலில், அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியப்  பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்ப ருமான கவுதம் அதானி நான்காவது இடத்தைப் பிடித்து, சக பெரும்பணக்காரர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். உலக அளவிலான பெரும் பணக்காரர்கள்  பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளி யிட்டுள்ளது. இதில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். லூயிஸ் உயிட்டன் பெர்னார்ட் அர்னால்டு 2-வது இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் நிறு வனருமான கவுதம் அதானி 4-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு  சுமார் 114 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்  கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற  இடத்தில் இருந்தார். இந்நிலையில் அம்பானி யைப் பின்னுக்குத் தள்ளி தற்போது கவுதம் அதானி, உலகப் பணக்காரர் பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். 

2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கு இடை யில் அதானியின் நிகர சொத்து மதிப்பு 50 பில்லி யன் டாலரில் இருந்து 90 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. அதானி குழுமம் இந்தியா வின் முதல் 3 கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக  உள்ளது. ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், சுரங்கம் மற்றும் வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்  றும் விமான நிலையங்கள் என பல்வேறு வணிகங்களுடன் 197.49 பில்லியன் டாலருக்  கும் அதிகமான ஒருங்கிணைந்த சந்தை மூல தனத்துடன், பொதுவில் பட்டியலிடப்பட்ட 7 நிறு வனங்களை கொண்டுள்ளது. இந்த கோடீஸ்வரர் பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்  டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்  டால் 91-வது இடத்தில் உள்ளார். இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்  தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார். அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார். 

இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான சாவித்ரி ஜிண்டா லின் சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020-ஆம்  ஆண்டு இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லி யன் டாலராக இருந்தது. நடப்பாண்டில் சொத்து மதிப்பு 17.7 பில்லியன் டாலராக  அதி கரித்துள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டு களில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.  அதேநேரம் கடந்த 2019 மற்றும் 2020-ல்  இவரின் சொத்து மதிப்பு 50 சதவிகிதம் குறைந்  துள்ளது. 2018-ஆம் ஆண்டில் 8.8 பில்லியன் டாலராக இருந்த சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு, 2019-இல் 5.9 பில்லியன் டாலராகவும், 2020-இல் 4.8 பில்லியன் டாலராகவும் சரி வினை கண்டிருந்தது. அதன்பின்னர் தனது நிறுவனத்தை லாபத்தின் பாதையில் நகர்த்திய சாவித்ரி ஜிண்டால் உலகின் பணக்காரர் பட்டி யலில் முதல் 13 பெண் கோடீஸ்வரர்களில் ஒரு வராக வந்துள்ளார்.