மும்பை, ஏப். 10 - “மக்கள் பிரச்சனைகள் அனைத்தை யும் புறக்கணித்து விட்டு, அயோத்தி க்குச் செல்கிறார்கள், இவர்களுக்கு ராமர் அருள் புரிவாரா?” என்று மகா ராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை, சஞ்சய் ராவத் காட்ட மாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அயோத்தி சென்று ராமரை தரிசனம் செய்தனர். மேலும், ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டனர். அப்போது பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ``எங்களது அயோத்தி யாத்திரையால் சிலருக்கு மகிழ்ச்சி இல்லை. சிலருக்கு இந்துத்துவாமீது அலர்ஜி. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கண க்கான இந்துக்களின் கனவாகும். பிரத மர் மோடியைத் தவிர ராமர் கோயில் கட்ட யாரும் எதுவும் செய்யவில்லை. பால் தாக்கரேயின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியிருக்கிறார். சிலர் ராமர் கோயில் கட்டுவோம் என்று சொன்னார்கள். ஆனால், தேதியைச் சொல்லவில்லை. பிரதமர் மோடி தான் ராமர் கோயிலைக் கட்டி கோடிக் கணக்கான இந்துக்களின் கனவை நனவாக்கினார்” என்று தெரிவித்தார். இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸின் அயோத்தி பயணத்தை, உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனாவின் மூத்தத் தலை வர் சஞ்சய் ராவத் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களி டம் பேசியிருக்கும் சஞ்சய் ராவத், “மழை மற்றும் ஆலங்கட்டி மழையால் மாநிலத்தில் விவசாயிகள் துயரத்தில் இருக்கும் நேரத்தில் அவர்கள் அயோ த்திக்கு சென்றுள்ளனர்.
மாநிலத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் புறக்கணித்து விட்டு அயோத்திக்கு செல்கின்றனர். இவர்களுக்கு ராமர் அருள் புரிவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “நாங்களும் ராமரை நம்புகிறோம்; நாங்களும் பல முறை அயோத்திக்குப் போயிருக்கி றோம். ஆனால் பாஜக எங்கள் கட்சியு டன் வரவில்லை. எங்களை நகல் எடுக்கிறார்கள். யார் ஒரிஜினல், யார் டூப்ளிகேட் என்பது பொதுமக்களுக்கு தெரியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை அவசியமில்லை; உச்ச நீதிமன்ற விசாரணையே சரியானது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருப்பது குறித்தும் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். “நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசார ணை வேண்டுமா அல்லது உச்சநீதி மன்ற விசாரணை வேண்டுமா? என்பது குறித்து சரத் பவாருக்கு வேறு கருத்து இருக்கலாம். இதனால் எதிர்க்கட்சி ஒற்றுமையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக அர்த்தமாகாது. ஆனால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் நிற்கும் இடத்தில் சிவ சேனா நிற்கும். எதிர்க் கட்சிகளின் உயரிய தலைவர்களில் ஒரு வராக சரத் பவார் இருப்பார். ஜன நாயகத்தில் தனது சொந்தக் கருத்தை பேச அவருக்கு உரிமை உண்டு” என்று ராவத் குறிப்பிட்டுள்ளார்.