பாட்னா, ஏப்.12- ‘ராம நவமி’ ஊர்வலம் என்ற பெயரில், தில்லி, குஜராத், மத்தி யப்பிரதேசம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சங்-பரிவார் அமைப்புகள், இஸ்லாமியர்க்கு எதிராக வன்முறையில் இறங்கி னர். இஸ்லாமியர்களின் உடமை களை தாக்கி, தீவைத்தனர். அந்த வகையில், பீகார் மாநி லம் முசாபர்பூரிலுள்ள மசூதியின் கோபுரத்தில் அவர்கள் காவிக் கொயையும் ஏற்றியுள்ளனர். சங்-பரிவாரங்கள், ராம நவமி யை முன்னிட்டு, முசாபர்பூர் கிரா மத்தில் பளபளக்கும் வாள்கள், ஹாக்கி ஸ்டிக்குகளுடன் இருசக் கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போதுதான் கிராமத்தி லுள்ள டாக் பங்களா மசூதியின் கோபுரம் மீது காவிக்கொடியை பறக்க விட்டுள்ளனர். மினார் மீது ஏறி காவிக்கொடி கட்டியவரை கை தட்டியும், ஒலி எழுப்பியும் சங்-பரி வாரங்கள் உற்சாகப்படுத்தியுள்ள னர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங் களில் வெளியான நிலையில், சம் பந்தப்பட்டவர்கள் மீது முதல் தக வலறிக்கை பதிவு செய்யப்பட்டி ருப்பதாக, முசாபர்பூர் எஸ்எஸ்பி ஜெயந்த் காந்த் தெரிவித்துள் ளார். எனினும், இதுவரை யாரை யும் கைது செய்யவில்லை.