தலச்சேரி, ஆக. 4- கேரள சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர், அறிவியல் குறித்து பேசியதை வகுப்பு வாத நோக்கத்துடன் விவாதமாக்கி யதில் ஆர்எஸ்எஸ் சதி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “ஷம்சீர் இந்து மதத்தையும் கடவுளையும் அவமதித்தார்” என்கிற பிரச்சாரம் சங்பரிவார் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து தலச்சேரியில் உள்ள சபா நாயகர் முகாம் அலுவலகத்திற்கு யுவமோர்ச்சாவினர் பேரணி நடத்தினர். அப்போது ஜோசப் மாஸ்டரின் கை வெட்டப்பட்டது போல் ஷம்சீரின் கையையும் வெட்டுவோம் என்று மிரட்டியுள்ளனர். சபாநாயரின் பேச்சைக் கேட்ட எவரும் இந்து மதத்தையோ கடவு ளையோ தவறாகப் பேசியதாகச் சொல்ல மாட்டார்கள். அறிவியலை விட கட்டுக்கதைகளை ஊக்குவிப்பதை அவரது உரை குறிப்பிடுகிறது. பிள்ளையாரின் தலை முதலாவது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்கிற கதையை பிரதமர் நரேந்திர மோடி திரும்பத் திரும்பக் கூறினார். மோடி சொன்னபோது ஏற்பட்ட காயமில்லாத உணர்வு , ஏ.என். ஷம்சீர் கூறும்போது காயப்படுத்திய பின்ன ணியில் உள்ளது பச்சையான வகுப்புவாதம். மாஹி பள்ளூரில் கொலை மிரட்டலு டன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கையை வெட்டுவேன் என்கிற யுவ மோர்ச்சா தலைவரின் மிரட்டலுக்குப் பதிலளித்த, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜெயராஜனின் உயிரைப் பறிப்பதாகவும் கூறினர். மணிப்பூர் கல வரம் மற்றும் பாஜக தலைமையிடம் இருந்து மக்கள் கவனத்தை ஈர்ப்ப தற்காக குன்னத்துநாடு தொகுதியில் ‘வித்யஜோதி’ துவக்க விழாவில் சபாநாயகரின் பேச்சு இல்லாத கதை களுடன் வெளியிடப்பட்டது.
சபாநாயகரின் பேச்சு இதுதான்
“பாடப்புத்தகங்கள் அறிவிய லுக்குப் பதிலாக கட்டுக்கதைகளை ஊக்குவிக்கின்றன. நீங்கள் இப்போது என்ன கற்பிக்க முயற்சிக்கிறீர்கள்? என் மாணவ பருவத்தில் விமானம் கண்டு பிடித்தது யார் என்பதற்கு பதில் ரைட் சகோதரர்கள் என்பதுதான். அதற்கு முன்பே புஷ்பக விமானம் கண்டு பிடிக்கப்பட்டதாக இப்போது கூறுகிறார்கள் என்றார். அறிவியலும் தொழில்நுட்பமும் வளர வளர அறிவியலின் இடத்தில் தொன்மங்கள் புகுத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக விமானத்தை கண்டுபிடித்தவர் ரைட் சகோதரர்கள் என்பதை தவறாக நினைக்கிறார்கள், அந்த இடத்தில் புஷ்பக விமானம் புகுத்தப்படுகிறது. திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஐவிஎஃப் சிகிச்சைக்கு செல்கின்றனர். சிகிச்சையின் போது சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. ஐவிஎஃப் சிகிச்சை நீண்ட காலமாக இருந்து வருவ தாகவும், அப்படித்தான் கௌரவர்கள் உருவானதாகவும் இப்போது கூறப்படு கிறது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது மருத்துவ அறிவியலில் ஒரு புதிய கண்டுபிடிப்பு. பிளாஸ்டிக் சர்ஜரியும் புராண காலத்திலேயே இருந்து வந்ததாகவும், மனித உடலும், யானையின் முகமும் கொண்ட பிள்ளையாரே இதற்கு உதாரணம் என்றும் கூறப்படுகிறது என்பதுதான் ஷம்சீரின் பேச்சு. பள்ளூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் கன்னிப்பொயில் பாபுவைக் கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கரிக்குன்னும்மாள் சுனி உள்ளிட்ட 20 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலச்சேரியில் உள்ள சபாநாயகர் முகாம் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்ற யுவமோர்ச்சா மாநில பொதுச் செயலாளர் கே.கணேஷ், ஏ.என்.ஷம்சீரின் கையை வெட்டப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜெயராஜன் பதில் அளிக்க, கே.சுரேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மிரட்டல் விடுத்து வந்தனர். இதன் தொடர்ச்சியே பள்ளூரில் நடந்த நிகழ்ச்சியாகும்.