கவுகாத்தி,செப்.14- பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இவரது குடும்பத்திற்கு சொந்தமாக பிரைட் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் (Pride East Entertain ments Pvt Ltd) என்ற ஊடக நிறு வனம் அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் ஆலையை நிறுவ அரசிடம் இருந்து ரூ.10 கோடி அரசு மானியமாக பெற்றுள்ள விவகாரம் தற்போது வெளியே கசிந்துள்ளது. இந்த மானி யத் தொகை மாநில அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்ச கத்தால் நிர்வகிக்கப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்பத் யோஜனாஸ் வேளாண் செயலாக்க திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்
ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறு வனம் வடகிழக்கில் உள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றா கும். இரண்டு செய்தி சேனல்கள், ஒரு செய்தித்தாள், ஒரு டிஜிட்டல் போர்டல் மற்றும் குறைந்தது மூன்று பொழுது போக்கு சேனல்களை வைத்திருக்கும் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறு வனத்தின் உரிமையாளராக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா உள்ளார். மேலும் நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களாக ஹிமந்தா பிஸ்வாவின் தாயார் மிருணாளினி தேவி, ஹிமந்தா பிஸ்வாவின் மகன் நந்தில் பிஸ்வா சர்மா, மகள் சுகன்யா சர்மா ஆகியோர் உள்ளனர். ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஊடக நிறுவனம் தனது வணிக ஆர்வங்களை பட்டு உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் போன்றவற்றுக்கு விரிவுபடுத்தியுள்ளது என கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திடம் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல் வெளி யாகியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 4 அன்று பிரைட் ஈஸ்ட் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் நாகோனின் கலி யாபோர் வட்டத்தில் உள்ள டாரி கோஜி கிராமத்தில் உத்தேச உணவு பதப்படு த்தும் ஆலைக்காக கிட்டத்தட்ட 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. மேலும் சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. கையகப்படு த்தப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாய நிலங்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் விஷய மாகும்.
காங்கிரஸ் கண்டனம்
குடும்பத்திற்கு சொந்தமான ஊடக நிறுவனத்திற்கு ரூ.10 கோடி மானியம் வழங்கிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிற்கு அசாம் பிரதேச காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “மாநில மக்க ளுக்காக உழைக்கிறேன் என்று கூறிக் கொண்டு தனது மனைவி மற்றும் குடும்பத்திற்காக அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா உழைக் கிறார். இதுதொடர்பாக விசாரணை க்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளது.