states

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 14 ஆயிரம் கோடி பாக்கியை மோடி எப்போது தருவார்?

பிரியங்கா காந்தி கேள்வி

பதான்கோட், பிப். 18 - தனது சுற்றுப்பயணத்திற்காக ரூ. 16 ஆயிரம் கோடிக்கு விமானம் வாங்கிய பிரத மர் மோடி, கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய 14 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி யை இப்போது வரை வழங்காமல் வஞ்சிக் கிறார் என்று காங்கிரஸ் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள் ளார். இவர்தான் விவசாயிகள் மீதும், நாட்டு மக்கள் மீதும் அக்கறையுள்ள பிரதமரா?  என்றும் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரியங்கா கேள்வி எழுப்பியுள் ளார். “பிரதமர் தனது இல்லத்திலிருந்து 5-6 கி.மீ. தூரத்தில், போராடிக் கொண்டி ருந்த விவசாயிகளை சந்திப்பதற்கு தயா ரில்லை. அவர்களை தில்லியில் ஓராண்டு காலம் போராட வைத்தார். ஆனால் இன்று பிரச்சாரத்துக்காக பதான்கோட்டி ற்கே வருகிறார்.  அவர் அமெரிக்கா, கனடா, உலகமெ ங்கும் சுற்றி வந்து ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பிலான 2 விமானங்களை வாங்கியுள் ளார். ஆனால், நிலுவையில் உள்ள ரூ. 14 ஆயிரம் கோடியை கரும்பு விவசாயி களுக்கு வழங்குவதாக இல்லை. அவரு டைய அமைச்சரவையில் உள்ள அமைச்ச ரின் மகன்தான் 6 விவசாயிகள் மீது காரை  ஏற்றினார். இப்போது தேர்தலுக்காக மோடி பஞ்சாப் மக்களிடம் தலை வணங்கிப் பேசி  வருகிறார். ஆனால், ஏற்கெனவே அவர்  கார்ப்பரேட்டுகளிடம் தலை வணங்கி யவர்தான் என்பதை மறுக்க முடியாது. பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டில்  அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கு பவையாக உள்ளன. ஆனால், அவற்றை பிரதமா் மோடி தனது கோடீஸ்வர நண்பா்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்.  இவ்வாறு பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.