states

பல்கலைக்கழக வளாகத்தில் போராடுவதற்கு தடைவிதித்து, திடீரென பின்வாங்கிய ஜேஎன்யு!

புதுதில்லி, மார்ச் 3 - பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம், தர்ணா நடத்தினால் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகம் (JNU) திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. கல்வி வளாகத்தை காவிமயமாக்கும் மோடி அரசின் நடவடிக்கைகளையும், மதவாத செயல்பாடுகளையும் தில்லி ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து எதிர்த்து வரு கின்றனர். அண்மையில், இஸ்லாமியர்க்கு எதி ரான குஜராத் வன்முறை தொடர்பான பிபிசி  ஆவணப்படத்தை திரையிட்டதுடன், மும்பை ஐஐடி-யில் தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி மரணத்திற்கு நீதிகேட்டும் ஊர்வலம் சென்ற னர். அப்போது, ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த ஒரு கும்பல் ஜேஎன்யு  மாணவர்கள் மீது வன்முறையை அரங்கேற்றி யது. மாணவர் செயற்பாட்டு மன்றத்தில் இருந்த மார்க்ஸ், லெனின், பெரியார் படங்களையும் அடித்து நொறுக்கியது. இந்நிலையில், ஜேஎன்யு பல்கலைக்கழக நிர்வாகமானது, ஏபிவிபி வன்முறை மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஜனநாயக முறையில் செயல்படும் மாணவர்களின் போராட்டத்திற்கு தடை விதித்தது. ‘ஜேஎன்யு மாணவர்களின் ஒழுங்கு விதி முறைகள், முறையான நடத்தை’ என்ற பெய ரில் 10 பக்கங்களைக் கொண்ட விதிகள் பல்கலைக் கழக நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டது.

அதில், “பல்கலைக்கழக வளாகத்தில் தாக்குதல், தகாத வார்த்தைகளால் பேசுவது, பல்கலைக் கழக ஊழியர்களைத் தாக்குவது, போராட்டம், தர்ணா நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடு பட்டால், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு ரூ. 5  ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது சேர்க்கை ரத்து செய்யப்படும்” என்று அறிவித்திருந்தது. “தர்ணாவில் ஈடுபட்டால் ரூ. 20ஆயிரம் மற்றும் வன்முறையில் ஈடுபட்டால் ரூ. 30 ஆயிரம், ஒரு மாணவர் மற்றொரு மாணவர், ஊழி யர்கள், பேராசிரியர்களிடம் உடல்ரீதியான வன்முறையில் ஈடுபட்டால் ரூ. 50ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும்” என குறிப்பிட்டிருந்தது. இதனை மிகக் கொடூரமான விதிமுறைகள் என்று கூறிய மாணவர்கள், ஜேஎன்யு நிர்வா கத்தின் தன்னிச்சை அறிவிப்பு குறித்து ஆலோச னை நடத்த வியாழக்கிழமையன்று (மார்ச் 2) அனைத்து மாணவர் சங்கக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, போராட்டங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ டி. பண்டிட் அறிவித்துள்ளார். ‘‘இந்த சுற்றறிக்கை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. சர்வதேச மாநாட்டுக்காக நான் ஹூப்ளி சென்றிருந்தேன். இந்த சுற்றறிக்கையை வெளியிடும் முன் தலைமைப் பொறுப்பாளர் என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. இந்த விதிமுறை தயாரிக்கப்பட்டது குறித்தும் எனக்கு தெரியாது. செய்தித்தாள்களின் வாயிலாகவே இதை அறிந்துகொண்டேன். இதனால் அந்த விதிகளை திரும்பப் பெறுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.