states

img

தேர்தலுக்குப் பிறகு கடுமையாக உயரப் போகும் விலைவாசி!

இரட்டை இலக்கத்தில் நீடிக்கும் மொத்த விலைப் பணவீக்கம்!

“நடப்புக் காலாண்டில் சில்லரை விலை பணவீக்கம் உச்சத்தை எட்டினாலும் அது உடனடியாக குறைய வாய்ப்பில்லை. ஜூன் 2022-இல் நிதிக் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றங்கள் வரலாம். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் வங்கி வட்டி விகிதம் தலா 25 அடிப்படை புள்ளிகள் கொண்ட இரண்டு ரெப்போ ரேட் உயர்வுகள் இருக்கும். 2022-23 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பண வீக்கம் கணிசமாகக் குறையாது” என்று இக்ரா (ICRA) தலைமைப் பொருளா தார நிபுணர் அதிதி நாயர் கூறியுள்ளார். “சில்லரை விலைப் பணவீக்கத்தைப் பொறுத்தவரை, இவை ஒரு முறை அதி கரித்தால் குறையாது. மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நுகர்வோருக்கு அதிக வாங்கும் தேவை இருப்பதால் அது சார்ந்து பணவீக்கம் உயரவே வாய்ப்பு உள்ளது” என்று, ‘பாங்க் ஆப் பரோடா’ தலைமைப் பொருளாதார வல்லுநர் மதன் சப்னா விஸும் உறுதிப்படுத்துகிறார். “பெரும்பாலான மாநிலங்களில் பணவீக்கம் 6 சதவிகிதமாக உள்ளது. இதுவே ஹரியானாவில் 7.2 சதவிகிதம் என்ற உச்சத்தில் இருக்கிறது” என்றும் மதன் சப்னாவிஸ் குறிப்பிடுகிறார்.

2021 நவம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 16 சதவிகிதம் வரை குறைந்து 76 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் பீப்பாய் ஒன்றுக்கு 15 டாலர் அதிகரித்து தற்போது 95 டாலரை எட்டியுள்ளது. 5 மாநிலத் தேர்தலையொட்டி, பெட்ரோல் - டீசலின் விலை உயர்வை நிறுத்தி வைத்துள்ள மோடி அரசு, மார்ச் மாதத்திற்குப் பிறகு, இவற்றின் விலையை கடுமையாக உயர்த்தும் என்பதால், அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயரும் என்று ‘பிரிக்வொர்க் ரேட்டிக்ஸ்’ நிறுவனத்தின் எம். கோவிந்த ராவ் உள்ளிட்ட வல்லு நர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை எதிர்கொள்ள, ஒன்றிய அரசானது, ஒன்று, வரும் காலங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டும் அல்லது கலால் வரியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரி விக்கின்றனர். சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ள அதேநேரத்தில், உற்பத்தியா ளர்களின் செலவை குறிக்கும் மொத்த விலை பணவீக்கமும், 2021 டிசம்பரோடு ஒப்பிடுகையில் 2022 ஜனவரியில் குறைந்துள்ளது. டிசம்பரில் 13.56 சதவிகித மாக இருந்தது, தற்போது 12.96 சதவிகிதமாக குறைந்துள்ளது. எனினும், மொத்த விலைப் பணவீக்கம் தொடர்ந்து பத்தாவது மாதமாக இரட்டை இலக்கங்களுக்கு மேலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த விலைப் பணவீக்கத்திலும் குறிப்பாக, உணவுப் பொருள் பணவீக்கம் 24 மாதங்களில் இல்லாத அளவுக்கு 9.6 சதவிகித மாக உயர்ந்துள்ளது.

புதுதில்லி, பிப்.15- இந்தியாவின் சில்லரை விலைப்  பணவீக்கம், கடந்த 7 மாதங்களில் இல்லாத உயர்வைச் சந்தித்துள்ள தாக தேசிய புள்ளியியல் அலுவல கம் (National Statistical Office - NSO) அறிக்கை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் (Consumer Price Index -CPI) கணக்கிடப்படும் சில்ல ரைப் பணவீக்கமானது, அதிகபட்ச மாக கடந்த 2021 ஜூலையில் 6.60 சதவிகிதமாக உயர்ந்தது. 2021 ஆகஸ்டில் 4.35 சதவிகிதமாகவும், செப்டம்பரில் 4.35 சதவிகிதமாக வும், அக்டோபரில் 4.48 சதவிகித மாகவும், நவம்பரில் 4.91 சதவிகித மாகவும் அதிகரித்துக் கொண்டே சென்ற சில்லரை விலைப் பண வீக்கம், 2021-ஆம் ஆண்டின் முடி வான- டிசம்பர் மாதத்தில் 5.66 சதவிகி தத்தைத் தொட்டு நின்றது. தற்போது, 2022-ஆம் ஆண்டின் துவக்கத்திலும் உயர்வைச் சந்தித்துள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 6.01 சதவிகித மாக அதிகரித்துள்ளது. 2021 ஜூலைக் குப் பிறகு, மீண்டும் 6 சதவிகிதத் தைக் கடந்துள்ளது.

2021-22 நிதியாண்டிற்கான பண வீக்க வரம்பை 6 சதவிகிதமாக இந் திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந் தது. அந்த வகையில், நடப்பு நிதி யாண்டு முடிவடைவதற்கு 2 மாதங்க ளுக்கு முன்னதாகவே, 6 சதவிகிதம் என்ற உச்சவரம்பை பணவீக்க உயர்வு தாண்டியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு இதே ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 4.06 சதவிகிதம் என்ற நிலையிலேயே இருந்த நிலையில், அது ஓராண்டில் சுமார் 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல் - டீசல் விலையானது, கடந்த 100 நாட்களுக்கும் மேலாக எவ்வித மாற்றத்திற்கும் உள்ளாகா மல் நிலையான விலையில் விற் பனை செய்யப்பட்டு வந்தாலும் காய் கறி மற்றும் தானியங்கள், முட்டை, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்க ளின் விலை உயர்வு, தற்போதைய பணவீக்க அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக கூறப்பட்டுள்ளது.

உணவுப் பொருள் சார்ந்த பண வீக்கம், 2021 ஜனவரியில் 4.05 சதவிகி தமாக இருந்தது, 2022 ஜனவரியில் 5.43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் கொழுப்பு ரக உணவுகளின் விலை வாசி உயர்வு விகிதம் 2021 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 2022 ஜனவரியில் 18.70 சதவிகிதம் அதி கரித்துள்ளது. அதேபோல ஆடை கள் மற்றும் காலணிகள் விலைவாசி உயர்வு விகிதம் 8.84 சதவிகிதமாக வும், எரிபொருட்கள் விலைவாசி உயர்வு விகிதம் 9.32 சதவிகிதமாக வும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த மாக கிராமப்புறங்களில் சில்லரை விலைவாசி உயர்வு விகிதம் 6.12 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 5.91 சதவிகிதமாகவும் அதிகரித்துள் ளது. கடந்த வாரம் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் முக்கியக் கடனுக்கான வட்டி விகி தங்களில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. அதுமட்டு மல்லாமல், அடுத்த நிதியாண்டில் - அதாவது 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலத்திற்கு சில்லரை விலைப் பணவீக்கம் 4.5 சத விகிதம் என்ற அளவில்தான் இருக் கும் என்றும் கணிப்பு வெளியிடப பட்டு இருந்தது.  ஆனால், 2021 ஆகஸ்டில் இருந்து 2022 ஜனவரி வரை தொடர்ச்சியாக பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதைப் பார்க்கையில், ரிசர்வ் வங்கி கணிப்பிற்குள் சில்லரை விலைப் பணவீக்கம் கட்டுப்படுவ தற்கான நிலைமைகள் தெரிய வில்லை; சில்லரை விலைப் பண வீக்க உயர்வு காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு விலைவாசி கடு மையாக அதிகரிக்க வாய்ப்பு இருப்ப தாக நிதித்துறை வல்லுநர்கள் எச்ச ரிக்கின்றனர்.