states

img

ஜெனரல் பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் மரியாதை

கோவை, டிச.9–  குன்னூரில் நடைபெற்ற ஹெலி காப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.  நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் புத னன்று விபத்துக்குள்ளானது. இதில், பிபின் ராவத், அவரது மனைவி மது லிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரி கள்  உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது.  இந்நிலையில், முப்படை களின் தளபதி பிபின் ராவத் உள்ளி ட்ட, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழ ந்தவர்களின் உடல்கள் வியாழனன்று குன்னூரிலுள்ள மெட்ராஸ் ரெஜி மென்ட் சென்டர் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ்  சதுக்கத்தில் முக்கிய பிரமுகர் களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டி ருந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 11.20 மணிக்கு பிபின் ராவத்தின் உடலுக்கு மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின் விபத்தில் உயிரிழந்த பிற ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.  இதனையடுத்து விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி, வெலிங்டன் முப்படை அதி காரிகள் பயிற்சிக் கல்லூரி முதல்வர் எம்.ஜே. எஸ்.கலோன், வெலிங்டன் ராணுவ மைய தலைவர் பிரிகேடியர் ராஜேஸ்வர் சிங் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கா.ராமசந்திரன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் அஞ்சலி செலுத்தினர்.