புதுதில்லி, மே 19- நாட்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப் போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெள்ளியன்று வெளி யிட்ட அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பின் படி புழக்கத்தில் இருக்கும் 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத னால் அனைத்து வங்கி களும் செப்டம்பர் 30 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளுக்கு டெபாசிட் அல்லது மாற்றும் வசதியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். பொதுமக்களும் செப்டம்பர் 30-க்குள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. மே 23 முதல் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்” எனக் கூறப் பட்டுள்ளது.