states

சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா

புதுதில்லி, மார்ச் 31 - ஒன்றிய பாஜக அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சி, நாடு தழுவிய அள வில் சுவரொட்டி இயக்கத்தை துவங்கி யுள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த வாரமே இந்த போராட்டத்தை ஆம் ஆத்மி துவங்கியது. அப்போது, “மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சோ” (மோடியை அகற்றுவோம்; நாட்டைக் காப்பாற்றுவோம்) என்ற முழக்கத்துடன் கூடிய இந்த சுவ ரொட்டிகள், திரும்பும் திசையெங்கம் பரபரப்பை ஏற்படுத்தின.  அதிர்ச்சியடைந்த ஒன்றிய அரசு,  உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டிலுள்ள தில்லி காவல்துறை மூலம் இந்த சுவரொட்டிகள் தொடர்பாக 100 வழக்குகளை பதிவு செய்தது. பலரைக் கைது செய்தது. எனினும், தனது சுவரொட்டி இயக்கத்தைக் கைவிடாத, “மோடி யை அகற்றுவோம்; நாட்டைக் காப்பாற்றுவோம்” என்ற முழக்கத்தை 22 மொழிகளில் சுவரொட்டியாக வெளியிட்டு, அதனை நாடு முழுவதும் ஒட்டுவதென முடிவு செய்த ஆம்  ஆத்மி கட்சி, அதனபடியே குஜராத்  உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளி லும் இந்த சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளது.

“ஒன்றிய பாஜக அரசானது, நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறு தியை நிறைவேற்றவில்லை என்ற  உண்மையை அம்பலப்படுத்தவே இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படு கிறது; குறிப்பாக விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை; மாறாக, ஜனநாயகத்துக்கு முடிவுகட்ட பாஜக முயற்சி செய்து வருகிறது; இது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இதுபோன்ற சுவரொட்டி கள் ஒட்டப்படும்” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் மோடிக்கு எதிரான சுவரொட்டி களை ஒட்டியதற்காக, நட்வர் பாய், போபட் பாய், ஜட்டின் பாய், சந்திரகாந்த் பாய் பாட்டீல், குல்தீப் சரத்குமார் பட், ரவிந்தர பாய் சர்மா, அஜய் சுரேஷ் பாய் சவுகான், அரவிந்த் கோர்ஜிபாய் சவுகான், ஜீவன் பாய் வசுபாய் மகேஷ்வரி, பர்தேஷ் வசுதேவ்பாய் துல்சியா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.