புதுதில்லி, செப். 8 - இந்திய தேர்தல்களை கண் காணிக்கும் அமைப்பான, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democ ratic Reforms - ADR) உச்ச நீதிமன் றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் பதிவான வாக்கு களை சரிபார்க்கும் வி.வி.பேட் இயந்திரம் ஆகிய இரண்டிலும் பதிவான வாக்குகள் குறித்த கணக் கீடுகள் முறையாக மேற்கொள்ளப் பட வேண்டும்; தாங்கள் சரியா கத்தான் வாக்குகளை செலுத்தி யுள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண் டும்; இதுதொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஏடிஆர் அமைப்பு கூறியிருந்தது. ஆனால், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள மறுத்துவிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த விவகாரத்தில் நவம்பர் மாதம் முடி வெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.