states

img

3 மாதங்களுக்கு முன்பே வேலையைத் துவங்கிய ராம்நாத்!

புதுதில்லி, செப். 5 - “ஒரே நாடு; ஒரே தேர்தல்” திட்டம் தொடர்பாக  ஆராய்வதற்காக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், மோடி  அரசு குழு அமைத்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே,  முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் அறிவித்தது. இதில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குழுவில் இடம்பெற மறுத்து விட்டார். எனினும், செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22  வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும்  ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்ய மோடி அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

அம்பலப்படுத்தும் ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’

இந்நிலையில்தான், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ பின்னணியில் பாஜக பின்னியிருக்கும் சூழ்ச்சி வலைகள் பல வெளிச்சத்திற்கு வந்துள் ளன. ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு, இது தொடர்பான பல்வேறு விவரங்களை வெளி யிட்டுள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த்,  ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’  திட்டத்திற்கான களத்தை தயார் செய்யும் பணி யில் 3 மாதங்களுக்கு முன்பே இறக்கிவிடப் பட்டு, அவரும் ஏறக்குறைய பணிகளை முடித்து  விட்டார் என்பதை நாள் வாரியாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூன் 2-இல் ஆரம்பித்த வேலைகள்

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம், திறந்து வைக்கப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2 அன்று, குடியரசு முன்னாள் தலைவர்  ராம்நாத் கோவிந்தை, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர்  நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா ஆகியோர் சந்தித்துள் ளனர். இந்தச் சந்திப்பின்போதுதான், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு உள்ளது. இந்த விஷ யத்தில் நீங்கள்தான் தலைமையேற்று நடத்தித் தர வேண்டும்” என்று ராம்நாத் கோவிந்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

கர்நாடகத் தோல்வியால்  அச்சமடைந்த பாஜக

கர்நாடக தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இந்த படுதோல்வியை பாஜகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷா வும், கர்நாடகத்தை வீதி வீதியாக வலம் வந்தும் பாஜக தோற்றுப்போனது, 2024 மக்களவைத் தேர்தல் குறித்த கவலையை, அச்சத்தை பாஜக-வுக்கு ஏற்படுத்தியது. 2024 மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு ஆட்சியமைப்பதற்கு உரிய எண்ணிக்கை கிடைக்குமா என்ற சந்தே கத்தை ஏற்படுத்தியது. இதுதான், ‘ஒரே நாடு;  ஒரே தேர்தல்’ திட்டத்தை, பாஜக கையில் எடுக்க முதன்மையான காரணம். அதற்கு, குடியர சின் முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பயன்படுத்த முடிவு செய்தது. அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

மோடிக்கு நம்பிக்கையான ராம்நாத் கோவிந்த்

குடியரசு முன்னாள் தலைவரான ராம்நாத் கோவிந்த், அடிப்படையில் வழக்கறிஞர். சிக்கலான சட்ட விஷயங்களைக் கையாளும் திறன் கொண்டவர் என்று கூறப்படுபவர். சுமார் 16 ஆண்டு காலம் தில்லி உயர் நீதிமன்றத்தி லும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1977 முதல் 1979 வரை ஒன்றிய அரசுக்கான சட்ட ஆலோசகராக இருந்தவர் என்பதுடன், இதே 1977 - 78 காலப்பகுதியில் அன்றைய பிரதமரான மொரார்ஜி தேசாயின் தனிப்பட்ட உதவியாளராகவும் பணி புரிந்தவர். பின்னர் பாஜக-வில் இணைந்து தேர்தலில் அரசியலிலும் ஈடுபட்ட அவர், உச்சபட்சமாக குடியரசுத் தலைவர் பதவியையும் பெற்றார். மோடியின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதும், அவர் குடியரசுத் தலைவரானதற்குக் காரணம். அந்த அடிப்படையிலேயே, ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ களத்தைத் தயார் செய்யும்  பணி, ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக அடைய விரும்பும்  இரட்டை லாபம்
‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தைப் பொறுத்தவரை, எதிர்காலத்தில் நாட்டை அதிபர் ஆட்சிமுறையை நோக்கி நகர்த்தும், ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒரு பகுதி என்றால், 2024 தேர்தலுக்கு ‘இந்தியா’  கூட்டணி என்ற பெயரில் ஓரணியாக திரண்டுள்ள எதிர்க்கட்சிகளுக்குள் ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டிய உடனடி தேவையும், நெருக்கடியும், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தின் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 18-இல் துவங்கி 22 வரை நடத்த வுள்ள சிறப்புக் கூட்டத் தொடரில், ஒரே நாடு;  ஒரே தேர்தலுக்கான மசோதாவை நிறைவேற்றி னாலும், அதனை உடனடியாக அமல்படுத்த முடியாது. 2029-ஆம் ஆண்டு வாக்கில்தான் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவர முடியும். ஆனால், அதற்கான பயணத்தை இப்போதே துவங்க வேண்டும்.

குறிவைக்கப்படும் 2 பெரிய மாநிலங்கள்

இங்குதான் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவுள்ள ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா தனது வேலையைக் காட்ட உள்ளது.  2025-ஆம் ஆண்டுக்குள் பதவிக்காலம் முடிவடையும் சட்டமன்றங்களை 2024 மக்கள வைத் தேர்தலுக்கு முன்னதாகவே கலைத்து விட்டு, சட்டமன்றத்திற்கும் நாடாளு மன்றத்திற்கும் ஒருசேர தேர்தல் நடத்தலாம் என்ற அடிப்படையில்தான் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை வடிவமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு 2025-ஆம் ஆண்டுக்குள் பதவிக்காலம் முடி வடையும் சட்டமன்றங்களாக மகாராஷ்டிரா, மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் உள்ளன. மகாராஷ்டிரா (48), மேற்குவங்கம் (42) ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் 90 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஓராண்டு பதவிக்காலத்தை இந்த சட்டமன்றங்கள் இழக்கும்.  அதேநேரம், கர்நாடகம், இமாசல பிரதேசம்  போன்ற- அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும். இந்த வகையில்தான் மசோதா கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக பின்னும் சதிவலைகள்

ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளு மன்றத்திற்கும் என்று கொண்டுவருவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைத்து  விடலாம் என கணக்குப் போடுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கள், காங்கிரஸ் ஆகியோர் மோதிக் கொள் வார்கள்; மகாராஷ்டிராவிலும் சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே பிரச்சனை  ஏற்படும்; தில்லி, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸூக்கு இடையே மோதலை ஏற்படுத்தும். முடிவில் நிலைமை தங்களுக்கு சாதகமாக திரும்பும். மீண்டும் தங்களுக்கே அதிகமான இடங்கள் கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.

வேகவேகமாக நடந்த வேலைகள்

இதன் அடிப்படையில், மசோதாவுக்கு முன்னதாக களத்தைத் தயார் செய்யும் பணி  ராம்நாத் கோவிந்திற்கு வழங்கப்பட்டு உள்ளது.  அவரும் உடனடியாகவே தனது பணியை துவக்கியுள்ளார். அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 1 அன்று தான் குழுவிற்கு ராம்நாத் கோவிந்த் தலைவராக நியமிக்கப்பட்டார்; மறு நாள் அமித்ஷா உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். செப்டம்பர் 3 அன்று ஒன்றிய சட்ட அமைச்சக அதிகாரிகள் குழுவின் ஆயத்தப் பணிகளுக் காக ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து அறி வுறுத்தல்களைப் பெற்றனர். ஆனால், இவ்வாறு குழு அமைப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னதாக ஜூன் 2 அன்றே  ராம்நாத் கோவிந்த், அதிகாரப்பூர்வ மற்ற வகையில் தனது பணிகளைத் துவக்கி விட்டார்.

9 ஆளுநர்களுக்கு  அளிக்கப்பட்ட விருந்து

பொதுவாக குடியரசுத் தலைவர்கள் ஓய்வு பெற்ற பின், அவர்கள் பரபரப்பான வேலைத் திட்டங்களை வைத்துக் கொள்வதில்லை. பதவி யில் இருக்கும்போதே அவர்கள், பொதுவாக சூரிய அஸ்தமன வருடங்களை அனுபவிக் கிறார்கள் என்றுதான் கூறப்படும். ஓய்வுக் காலத்தில் அதிகபட்சமாக ஒரு நினைவுக் குறிப்பை அவர்கள் எழுதுவார்கள். அவ்வளவு தான். ஆனால், அதற்கு நேர்மாறாக, ராம்நாத் கோவிந்த் ராஜ்பவன்களுக்குச் சென்று ஆளுநர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு விருந்தளிக்கத் தொடங்கினார். இந்த மூன்று மாதங்களில்- அதாவது ஜூன் 9 முதல் ஆகஸ்ட் 29-க்கு இடையிலான காலத்தில், குறைந்தபட்சம் 10 ஆளுநர்களை ராம்நாத் கோவிந்த் சந்தித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாஜக மூத்த தலை வர் முரளி மனோகர் ஜோஷி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்பட முக்கியமான பலரையும் ராம்நாத் கோவிந்த் சந்தித்துள்ளார்.

சந்திரசூட், ஒம் பிர்லா, அமித்ஷா, மோகன் பகவத்துடனும் சந்திப்பு

ஜூன் 9 அன்று பஞ்சாப் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், ஹரியானா ஆளுநர் பண்டாரு  தாத்தாத்ரேயா, ஜூன் 10 அன்று பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஜூன் 23 அன்று உத்தரப்பிரதேச ஆளுநர் அனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஜூன் 26 அன்று ஒன்றிய அமைச்சர் பூபேந்திர படேல், ஜூலை 7 அன்று தாத்ரா நாகர் ஹவேலி நிர்வாகி பிரபுல் கே படேல், ஜூலை 16 அன்று உத்தரப் பிரதேச துணைமுதல்வர் கேசப் பிரசாத் மவுரியா, ஜூலை 17 அன்று ஒடிசா ஆளுநர் கணேஷ் லால், பீகார் ஆளுநர் ராஜேந்திர அகலேகர், மேற்குவங்க ஆளுநர் டாக்டர் சி.வி.  ஆனந்த போஸ், ஜூலை 19 அன்று உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜூலை 23 அன்று மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லா, ஆகஸ்ட் 1 அன்று உள்துறை அமைச்சர்  அமித்ஷா, ஆகஸ்ட் 5 அன்று மீண்டும் மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், ஆகஸ்ட் 10 அன்று உத்தரகண்ட் துணைநிலை ஆளுநர் குர்மீத் சிங், ஆகஸ்ட் 11 அன்று குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், ஆகஸ்ட் 19 அன்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்,  ஆகஸ்ட் 25 அன்று மீண்டும் உ.பி. ஆளுநர் அனந்திபென் படேல், ஆகஸ்ட் 29 அன்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகி யோரை ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசியுள் ளார். இதன் நிறைவாகவே செப்டம்பர் 1 அன்று  அதிகாரப்பூர்வமாக, ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’  ஆய்வுக் குழுவிற்கு ராம்நாத் கோவிந்த் தலைவ ராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த உடனேயே, ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை கையிலெடுத்து விட்ட  பாஜக, 28 கட்சிகளுடன் ‘இந்தியா’ கூட்டணி  செல்வாக்குப் பெற துவங்கியதும், இனியும் தாம திக்கக் கூடாது என்று கருதியே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை அறிவித்துள்ளது. அதில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாவை நிறை வேற்றி விடுவதும் என்றும் வேகவேகமாக காய்களை நகர்த்தி வருகிறது.