ஹைதராபாத், பிப்.25- ராமானுஜரின் 1,000-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தெலுங்கானா தலை நகர் ஹைதராபாத்தில், அவருக்கு சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மாலை நடந்த விழாவில், ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னதாக நடந்த சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டு பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனும் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை யன்று “உலகிற்கு அர்ப்பணித்த” ஸ்ரீராமானுஜரின் பிரமாண்டமான ‘சமத்துவ சிலை’ சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது. சுமார் 135 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. ஒப்பந்தத்தை வெல்வதற்கான போட்டியில் இந்திய நிறுவனம் ஒன்று இருந்தாலும், சீனாவின் ஏரோசன் நிறுவனத்திற்கு 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்டர் வழங்கப்பட்டது.
சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ஸ்ரீ ராமானுஜ சஹஸ்ராப்தி அமைப்பா ளர்கள் சார்பாக மை ஹோம் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஜூபாலி கையெழுத்திட்டுள்ளார் ராமானுஜர் சிலையின் 14 மாதிரிகள் ஆகம சாஸ்திரங்களுடன் தயாரிக்கப்பட்டன, அவற்றில் மூன்று மாதிரிகள் 3D (3-டி) ஸ்கேனிங் மூலம் ஆய்வு செய்யப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டன. இறுதி மாதிரி பின்னர் சீனாவிற்கு அனுப்பப்பட்டது. 216 அடி உயரம் கொண்ட இந்த சிலை, உலகிலேயே அமர்ந்த நிலையில் இரண்டா வது உயரமான சிலை என்று கூறப்படு கிறது. தாமிரம், வெள்ளி, தங்கம், துத்தநாகம் மற்றும் டைட்டானியம் (ஐந்து உலோகங் களை உள்ளடக்கிய உலோகக் கலவை) ஆகியவற்றால் ஆனது. இதில் தாமிரம் 80 சதவீதம் உள்ளது. சீனாவில் வார்ப்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டு, சிலை 1,600 துண்டு களாக இந்தியா கொண்டு வரப்பட்டது.