புதுதில்லி, ஜூன் 19 - பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்கெனவே இருந்த 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புக்களை ஒழித்துக் கட்டியதுதான், இந்த நாட்டிற்கு அமிர்த காலமா..? என்று காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி யுள்ளார். “பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்த தோடு, இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவாகவும் இருந்தது. ஆனால், இன்று இவை அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல. நாட்டின் பொதுத்துறை நிறு வனங்களில் 2014-ஆம் ஆண்டில் 16.9 லட்சமாக இருந்த வேலைவாய்ப்பு 2022ல் 14.6 லட்சமாகக் குறைந்துள்ளது. வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் வேலைவாய்ப்புகள் குறையுமா? பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1 லட்சத்து 81 ஆயிரத்து 127 பேர் வேலை இழந்துள்ளனர். செயில் (SAIL) நிறு வனத்தில் 61 ஆயிரத்து 928 பேர், எம்டி என்எல் (MTNL) நிறுவனத்தில் 34 ஆயி ரத்து 997 பேர், எஸ்இசிஎல் (SECL) நிறுவனத்தில் 29 ஆயிரத்து 140 பேர், எப்சிஐ (FCI)-யில் 28 ஆயிரத்து 063 மற்றும் ஓஎன்ஜிசி-யில் 21 ஆயிரத்து 120 பேர் வேலை இழந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்று பொய் வாக்குறுதி அளித்தவர்கள்,
வேலைகளை அதி கரிப்பதற்குப் பதிலாக, 2 லட்சத்துக்கும் அதிகமானோரை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நிறுவனங்களில் ஒப்பந்த ஆட்சேர்ப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதி கரித்துள்ளது. ஒப்பந்த ஊழியர்களை அதிகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிப்பதாக ஆகுமல்லவா? அல்லது இந்த நிறு வனங்களை முழுமையாக தனியார்மய மாக்கும் சதி நடக்கிறதா? தொழிலதிபர்களின் கடன் தள்ளு படி, பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து அரசு வேலைகள் ஒழிப்பு- என்ன வகையான நீடித்த தன்மை இது? உண்மையிலேயே இது ‘அமிர்த காலம்’ என்றால் ஏன் இப்படி வேலை கள் காணாமல் போகின்றன? ஒருசில கூட்டுக்களவாணி முத லாளித்துவ நண்பர்களின் நலனுக்காக லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நசுக்கப்படுவதால், இந்த அரசாங்கத்தின் கீழ் நாடு வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித் தவிக்கிறது. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் சரியான சூழலையும், அரசாங்கத்தின் ஆதரவையும் பெற்றால், அவற்றால் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதி கரிக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் சொத்து, அவை இந்தியாவின் முன்னேற்றப் பாதையை வலுப்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட வேண்டும்” இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள் ளார்.